திருகோணமலை - ஈச்சிலம்பற்றில் சிறிய ரக லொறி விபத்து ; சாரதி படுகாயம்

 

திருகோணமலை - ஈச்சிலம்பற்றில் சிறிய ரக லொறி விபத்து ; சாரதி படுகாயம்



திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் சிறிய ரக லொறி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளது.

தோப்பூரில் இருந்து வெருகல் நோக்கி சிறிய ரக லொறியில் வியாபாரத்திற்காக பென்சி பொருட்களை ஏற்றிசே சென்ற போது சிறிய ரக லொறி இலங்கைத்துறை முகத்துவாரம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சிறிய ரக லொறி சாரதியான தோப்பூரைச் சேரர்ந்த 35 வயதுடைய நபர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021