ரயில் சாரதிகள் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம் !

 

ரயில் சாரதிகள் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம் !


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ, இந்த வேலைநிறுத்தம் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

நிர்வாகப் பிரச்சினைகள், பணி நிலைமைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள், தங்களது பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று (28) ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படவில்லை என சந்தன வியந்துவ தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021