Posts

ஞானசார தேரரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது... இதனை எவ்வகையிலும் நியாயப்படுத்தவும் முடியாது.

Image
 ஞானசார தேரரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது... இதனை எவ்வகையிலும் நியாயப்படுத்தவும் முடியாது.   நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை மதிக்கத்தவரை ஒரே நாடு  ஒரே சட்டம் இயற்றும் குழுவுக்கு நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மாளிகைக்காடு நிருபர் ஒரே நாடு ஒரே சட்டம் இயற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பொதுபல சேனாவின் செயலாளர் கலக்கட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எனும் இந்த தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இதுவரை பேணப்பட்டு வந்த மரபுகளும், மாண்புகளும் உடைத்தெறியப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட சட்டங்களை குறியாக வைத்து ஒரே நாடு ஒரே சட்டம் எனும் இந்த கொள்கை கடந்த நல்லாட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு இப்போதும் பேசுபொருளாக இருந்து வரும் விடயமாக உள்ளது. வெளிப்படையாக கூறுவதாயின் தமிழ் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தெற்கிலுள்ள பல அரசியல்வாதிகள் பேசிவந்தனர். ஆனால் இந்த விடயம் நாடு கொரோனாவில் சிக்கி இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு தவிப்பதுடன் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ள இந்த காலப்பகுதியில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என ஸ்ரீலங...

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்

Image
 நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்   நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில்  பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாளைய தினம் இலங்கை மின்சார சபையின் சகல சேவையாளர்களும் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, பதுளை, திருகோணமலை, குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் கிரிபத்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

பொலீஸ் அதிகாரி, பொலீசாரால் கைது..

Image
 பொலீஸ் அதிகாரி, பொலீசாரால் கைது..   பணமோசடி செய்த குற்றச்சாட்டில் வதுரப பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபா பணமோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாடுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அக்குரனை தாய்பள்ளி வாயிலுக்கு ஜனாஸா வாகனம் அனபளிப்பு!

Image
 அக்குரனை தாய்பள்ளி வாயிலுக்கு ஜனாஸா வாகனம் அனபளிப்பு!   அக்குரனை தாய்பள்ளி வாயிலுக்கு மிக நீண்ட நாள் தேவையாக இருந்துவந்த ஜனாஸா வாகனம் அன்மையில் ரூபி பிலாஸ்டிக் (Ruby Plastic) நிறுவனத்தினால் அன்பழிப்பு செய்யப்பட்டது. ஜனாஸாக்களை கொண்டு செல்லவும் அதனுடன் தொடர்புடைய வேலைகளை செய்வதற்கும் இவ்வாகனம் பிரதேச மக்கள் பாவனைக்காக பயண்படுத்தப்படவுள்ளது. அன்பளிப்பு செய்தவர்களுக்கு நீண்ட ஆயுளைகொடுக்க வேண்டும் இது போன்ற பல நற்காரியங்கள் எமது சமுகத்திற்கும் நாட்டிக்கும் செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாளிப்பானாக!

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது – இரா.சாணக்கியன்

Image
 ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது – இரா.சாணக்கியன்   ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணி, முரண்பாட்டின் வரைவிலக்கணம் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சித்துள்ளார். நாட்டில் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது என்றால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் தலைமையில், ''ஒரே நாடு, ஒரே சட்டம்" சட்ட வரைவை தயாரிக்க 13 பேர்கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்.

Image
  ஞானசார தேரர் தலைமையில், ''ஒரே நாடு, ஒரே சட்டம்" சட்ட வரைவை தயாரிக்க 13 பேர்கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்.   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாடு ஒரே  சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளார். 13 பேர் கொண்ட பணிக்குழுவின் தலைவராக  கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நோக்கம் இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல். நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும். இதில் சிறுபான்மை சார்பில் அசீஸ் நிசார்தீன், கலீல் ரஹ்மான், முகம்மத் இன்திகாப், முகம்மத் மவ்லவி ( உலமா கவுன்சில் ) ஆகியோர் உள்வாங்க பட்டுள்ளனர்.

வளிமண்டலத்தில் தொடரும் தளம்பல் நிலை... மேலும் சில தினங்களுக்கு மழையுடனான காலநிலை தொடரும்.

Image
 வளிமண்டலத்தில் தொடரும் தளம்பல் நிலை... மேலும் சில தினங்களுக்கு மழையுடனான காலநிலை தொடரும்.   இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற  தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு வானிலையில் தாக்கம் ஏற்படக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் தென் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் பிராந்தியங்களில் ************************* இலஙகைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் வானிலையில் தாக்கம் ஏற்படக்கூடும். ஆனபடியினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் எதிர்கால வானி...