Posts

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் தலை சிதறிய நிலையில் மீட்பு!

Image
 வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் தலை சிதறிய நிலையில் மீட்பு! வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக தலை சிதறிய நிலையில் காயங்களுடன் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரவு அனுமதித்தனர். எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (27.05.2022) இரவு 11.45 மணியளவில் வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் இரவு தலை சிதறிய நிலையில் வீதியின் நடைபாதையில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்திர...

பதவி விலகமாட்டேன் – ஜனாதிபதி கோட்டா திட்டவட்டம்!

Image
 பதவி விலகமாட்டேன் – ஜனாதிபதி கோட்டா திட்டவட்டம்! “புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார். அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். “பொருளாதார நெருக்கடியில் இருந்து என்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு. அதனால்தான் அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளேன். அதேவேளை, திறமைமிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருகின்றேன். அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை நியமனம் முழுமை பெறும். அமைச்சரவை நியமனம் முழுமை பெற்றவுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து நான் விலகுவேன் என்று சில ஊடகச் செய்திகளைப் பார்த்தேன். எனினும், நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன். ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை ஓரணியில் செயற்பட்டால்த...

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை

Image
  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படுகின்ற மோதல் நிலைமையை தவிர்ப்பதற்காக இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அனுராதபுரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீட்டின் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  அவரது வீட்டை தாக்குவதால் எரிபொருள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக செயற்பாடாகும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !

Image
  75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !   நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சுமார் 75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பெருமளவிலான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் அறிவித்துள்ளது.

800 ரூபாய்க்கு பெற்றோலை விற்ற பெண் கைது

Image
  800 ரூபாய்க்கு பெற்றோலை விற்ற பெண் கைது   அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெற்றோல் போத்தல் ஒன்றினை 800 ரூபாவிற்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார் என பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, ​​தனது கணவர் கொண்டு வரும் பெற்றோலை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்ம குமார விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

ஒருவேளை உணவைக்கூட சமைக்க முடியாத நிலையில் கொழும்பு மக்கள்

Image
  ஒருவேளை உணவைக்கூட சமைக்க முடியாத நிலையில் கொழும்பு மக்கள்   எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு வாழ் மக்களுக்கு ஒரு நேர உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.  மக்கள் பொறுமையை இழந்தே வீதிக்கு இறங்குகின்றனர். அதனால் அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் பொருளாதார ஆலோசகருமான சீ.வை.பி.ராம் தெரிவித்தார். எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் இல்லாமை காரணமாக கொழும்பு வாழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கொழும்பு மாவட்டத்தில் இருப்பவன் என்ற வகையில் கொழும்பு, வடக்கு, கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தியில் மக்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை கண்டு வருகின்றேன்.  அதிலும் குறிப்பாக தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும்பு மக்கள் எரிவாயு, எரிபொருள் பிரச்சினை காரணமாக பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.   கொழும்பு பிரதேசத்தில் நாளாந்த வாழ்வாதா...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பிரதமர்

Image
 அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பிரதமர் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் பட்ஜெட் உரையின் போது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். 2015 அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டிருந்தது.