Posts

Showing posts from August, 2023

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை #Sri Lanka #Sri Lanka President Mayoorikka 1 hour ago ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை

Image
  ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை #Sri Lanka   #Sri Lanka President உறுதிபடுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்குள் வரவேண்டாம் என்று ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சு மற்றும் அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து அங்கு சிக்கியிருந்த 32 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளன.  இதுதொடர்பாக ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதக் கடத்தல்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று இலங்கையர்களிடம் தெரிவித்துள்ளது.  மேலும், நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்குள் நுழைந்ததுடன் பின்னர் சரியான வேலைவாய்ப்பைப் பெறாமல், விசா காலம் முடிந்த பின்னரும் ஓமானில் தங்கியிருந்த நிலையிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது கடந்த நவம்பர் மாதம் முதல் ஓமான் நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் அங்கு சிக்கியிருந்த 400 இக்கும் மேற்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு வசதி செய்துள்ளதாக இலங்கை தூதரகம் குறிப்பிட...

ஆங்கில மொழிப் பாடத்தை வெற்றிகரமாக முடித்துள்ள 5 எம்பிக்கள்!

Image
  ஆங்கில மொழிப் பாடத்தை வெற்றிகரமாக முடித்துள்ள 5 எம்பிக்கள்! பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசியப்பட்டியல் எம்.பி, கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருணாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆகியோர் இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஆவர். ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் இதில் ஈடுபட்டிருந்த போதிலும், அது படிப்படியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

யாழிலிருந்து வவுனியா சென்ற பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு

Image
 யாழிலிருந்து வவுனியா சென்ற பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்புஅரச பேருத்தில் பயணிகளுடன் பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் இன்று (28) யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பேருந்தில் பாம்பை கண்ட பயணிகள் பதறியடுத்து அச்சம் கொண்டனர். அத்துடன் பேருந்தில் பாம்பு இர்ந்ததை அவதானிக்காது பயணிகளை ஏற்றிய நடத்துனர் மற்றும் சாரதி தொடர்பில் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸில் டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை

Image
  பிரான்ஸில் டைகர் நுளம்புகளிற்கு எதிரான நடவடிக்கை #France   #Lanka4   #லங்கா4   #பிரான்ஸ் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, பரிஸ் புறநகரங்களில் இரவு நேர நடவடிக்கைகள் சில முன்னெடுக்கப்பட்டுள்ளன. 'டைகர்' நுளம்பு என அழைக்கபடும் ஆபத்தான நுளம்புகளினால் டெங்கு, சிக்கன்குன்யா, சிகா உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருகின்றது.  புறநகர் பரிசான Place de la Liberation (Saint-Mandé) இல் இந்த நுளம்புகளுக்கு எதிராக பூச்சிகொல்லி மருத்து அடிக்கும் பணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் வீதிகள் முழுவதும் இரவு நேரத்தில் இந்த பூச்சிகொல்லி மருந்து அடிக்கப்பட்டு உள்ளது.  நேற்று வியாழக்கிழமை இரவு முதற்கட்டமாக இப்படி இடம்பெற்றது. இதற்காக அப்பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்து தடைப்பட்டதாக அறிய முடிகிறது.

சுவிஸ் பெர்ன் இரயில் நிலையத்தில் இரு பெண்கள் மோதிக்கொண்டுள்ளனர்

Image
சுவிஸ் பெர்ன் இரயில் நிலையத்தில் இரு பெண்கள் மோதிக்கொண்டுள்ளனர் #Police   #Switzerland   #Women   #Attack   #Lanka4   #சுவிட்சர்லாந்து   #தாக்குதல்   #பொலிஸ்   #லங்கா4   #பெண்கள்   பெர்ன் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. "ஒரு பெண் ஒரு இளம் பெண்ணை கத்தியால் தாக்கினார்," என்று நேரில் பார்த்த ஒருவர் ஊடகத்தற்கு கூறினார்.  தலையிட விரும்பிய ஒரு வயதான பெண்மணியும் தாக்குதலால் காயமடைந்தார். ரயில் நிலையத்தில் பணிபுரியும் வாசகரின் கூற்றுப்படி, சிறுமி பதின்ம வயது மற்றும் குற்றவாளி 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர். நிலைய மண்டபத்தில் உள்ள சந்திப்புப் புள்ளி நண்பகலில் முற்றுகையிடப்பட்டது.  பெர்ன் மாநில காவல்துறையில் இருந்து சுமார் ஒரு டஜன் படைகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் தளத்தில் இருந்தது. முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, ஒரு பதின்ம சிறுமி பெர்ன் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடத்தில் இருந்தபோது, திடீரென ஒரு பெண்ணால் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்தார். காயமடைந்த இளம் பெண்ணிற்கு உதவ ஒரு வயதான பெண்மணி விரைந்துள்...

35 பயணிகளுடன் விமான நிலையம் வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பிடித்தது

Image
  35 பயணிகளுடன் விமான நிலையம் வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பிடித்தது ! யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி கூறுகையில், புதன்கிழமை (23) இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம். வியாழக்கிழமை (24) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தீ விபத்து காரணமாக பஸ் முற்றாக எரிந்து உள்ளது. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கொச்சிக்கடை பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள...

நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு, 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது...!

Image
 நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு, 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது...! நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மின்சார சபை தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்திக்கு போதுமான நீர் இல்லாமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல ஸ்தாபகர் மற்றும் 34வது வருட குருகுல தினம்!

Image
  களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுல ஸ்தாபகர் மற்றும் 34வது வருட குருகுல தினம்! (ரவிப்ரியா) மண்முனை தென் எருவில் பிரதேசசெயலகப் பிரிவில் சிறப்பாக இயங்கிவரும் திருஞானசம்பந்தர் குருகுலம் சனியன்று (19) காலை அதன் 34வது ஆண்டு ஸ்தாபகர் தினத்தையும் குருகுல தினத்தையும் எளிமையாக கொண்டாடியது. குருகுல மண்டபத்தில் அதன் தலைவர் ப.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் சோ.ரங்கநாதனும், கௌரவ அதிதியாக சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபரலன சபை உபதலைவர் க.ஜெயகரனும்;. விசேட அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரி டாக்டர் ம.ருதேசனும் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளாக மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பொறுப்பதிகாரி சி.சிவகுமார், பிரதேச சிறுவர் நன்னடத்தைப் பொறுப்பதிகாரி ஜனாப் எம்.என்.எம்.றபாஸ் களுதாவளை தேசிய பாடசாலை அதிபர் க.சத்தியமோகன், மற்றும் விக்னேஸ்வரர் வித்தியாலய அதிபர் தெ.தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அழைப்பு அதிதியாக ஓய்வுநிலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி அமலநாதனும், கடந்த காலங்களில் குருகுல வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன்...

பிரான்ஸில் கடும் வெப்பம் நிலவுகின்றது

Image
  பிரான்ஸில் கடும் வெப்பம் நிலவுகின்றது #France   #Lanka4   #heat   #வெப்பமயமாதல்   #லங்கா4   #பிரான்ஸ் இன்று திங்கட்கிழமை அதிக வெப்பம் காரணமான நாட்டின் பாதி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மொத்தமாக 50 மாவட்டங்களில் பலத்த வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்டமாக 42°C வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  அதேவேளை, பிரான்சின் சுகாதார அமைச்சர் Aurélien Rousseau இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘பிரான்ஸ் முன்னர் எப்போதும் சந்திக்காத கடும் வெப்பத்தை சந்திக்கும்!’ என தெரிவித்தார்.

நாட்டில் அதிகமானோர் தாமாக முன்வந்து வரி செலுத்துகின்றனர் - பிரதமர் மோடி

Image
  நாட்டில் அதிகமானோர் தாமாக முன்வந்து வரி செலுத்துகின்றனர் - பிரதமர் மோடி #India   #Prime Minister   #Tamil People   #people   #taxes   #Tamilnews 2014ஆம் ஆண்டிற்கு முன்பு நடந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர், நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதை அது காட்டுவதாகவும் கூறியுள்ளார். நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர் வறுமை நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டில் 4 லட்ச ரூபாயாக இருந்த தனி நபர் சராசரி ஆண்டு வருமானம் தற்போது 13 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆட்சியின் ஊழல்கள் அரசின் நடவடிக்கையால் தற்போது ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது

Image
சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது #Sri Lanka   #prices   #onion   #Lanka4   சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது சந்தையில் 200 முதல் 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.  வெங்காயத்திற்கு இந்தியா ஏற்றுமதி வரி விதித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வெங்காய விற்பனை இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்ப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஆய்வு

Image
  பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஆய்வு #Sri Lanka   #Lanka4   #School Student ஒரு வருடத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பல செய்திகள் வந்துள்ளன. இவ்வாறானதொரு சம்பவம் நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இதன்படி, பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்துத் தெரிவித்திருந்தார்.  பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பல நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்காத மாணவர்களுக்கிடையிலான தற்கொலைகள் தொடர்பில் ஒப்பீட்டு தரவு பகுப்பாய்வு நடத்தப்பட உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து போராட்டம்

Image
  சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து போராட்டம் #Sri Lanka   #Keheliya Rambukwella   #Hospital   #strike   #Lanka4 சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது  புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வழி வகுத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை மாற்றி மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணுங்கள் எனக் கூறி சபாநாயகர் இடம் கொடுக்க உள்ள மனுவுக்கு வலி சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் துண்டு பிரசுர விழிப்புணர்வு நடவடிக்கையும் புதுக் குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது  இதன்போது நாட்டின் பொதுமக்களின் சுகாதார சேவையின் பாதிப்பு தொடர்பான துண்டு பிரசுரம் அங்கு வருகை தந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களிடமிர...

‘13’ இன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை : நிர்வாக அதிகாரங்கள் பகிரப்படுவதை பாராளுமன்றமே தீர்மானிக்கும் என்கிறது அரசாங்கம் !

Image
  ‘13’ இன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை : நிர்வாக அதிகாரங்கள் பகிரப்படுவதை பாராளுமன்றமே தீர்மானிக்கும் என்கிறது அரசாங்கம் ! 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற உணர்வு ரீதியான விடயங்களான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதால் அது தொடர்பில் ஒன்றிரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நிர்வாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் தலைமையிலான குழுவால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றமே இறுதியான தீர்மானத்தினை எடுக்கும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவின் அங்கத்தவரும், அரசாங்கத்தின் பிரதம கொரடாவுமான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மே...

சீனாவின் ஷி யான் - 6 கப்பலுக்கு அனுமதி : பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Image
  சீனாவின் ஷி யான் - 6 கப்பலுக்கு அனுமதி : பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு! சீனாவின் ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் - 6’ நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு ஆய்வுகளின் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஷி யான் - 6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் இந்தியா உள்ளிட்ட சில இராஜதந்திர தரப்புக்கள் தமது கரிசனைகளை வெளியிட்டிருந்தன.  இந்நிலையில், குறித்த கப்பலுக்கான அனுமதி தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படுவதாக கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தன.  இந்த நிலையில், குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் அக்கப்பலுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அனுமதியின் பிரகாரம், ‘ஷி யான் - 6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவுள்ளதோடு 17 நாட்கள் தரித்து நின்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.  குறித்த ஆய்வுப் பணிகளில் தேசிய கடல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனம் (நாரா) இணைந்து...

சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க திரவத்துடன் சிக்கிய இளைஞன்...!

Image
 சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க திரவத்துடன் சிக்கிய இளைஞன்...! சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க திரவத்துடன், இந்தியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக இலங்கைச் சுங்கத்தின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மும்பை செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர், சந்தேகத்தின் பேரில், எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, ஒரு கிலோ 280 கிராம் எடையுள்ள இந்த தங்க திரவத்தை அவரது உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில், சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

Image
  பிரான்ஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி! #France   #Lanka4   #Crash   #மரணம்   #விபத்து   #லங்கா4   #பிரான்ஸ் மேற்கு பிரான்சில் ஏற்பட்ட விமான விபத்தொன்றில் மூவர் பலியாகியுள்ளனர்.  ஆற்றில் விழுந்த விமானம் படகு மூலமாக கட்டி இழுக்கப்பட்டு மீட்கப்பட்டது. நேற்று முன் புதன்கிழமை மாலை இச்சம்பவம் Lavau-sur-Loire நகரில் இடம்பெற்றுள்ளது. சிறிய ரக விமானத்தில் பயணித்த நிலையில், திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானம் Nantes மற்றும் La Baule நகரங்களுக்கு உட்பட்ட ஆற்றுப்பகுதியில் விழுந்து மூழ்கியுள்ளது.  விமானத்தில் பயணித்த மூவரும் பலியாகியுள்ளனர். மூவரில் ஒருவர் பிரபல ஊடகவியலாளர் Gérard Leclerc என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஆற்றில் இருந்து தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து பாசலில் இருகார்கள் மோதிக்கொண்டதில் ஒரு கார் சாரதி உயிரிழந்தார்

Image
  சுவிட்சர்லாந்து பாசலில் இருகார்கள் மோதிக்கொண்டதில் ஒரு கார் சாரதி உயிரிழந்தார் #Death   #Switzerland   #Accident   #Lanka4   #சுவிட்சர்லாந்து   #மரணம்   #விபத்து   #வாகனம்   #லங்கா4   #vehicle புதன்கிழமை மாலை கார்ல்ஸ்ரூஹே திசையில் பாசலில் இருந்து பெடரல் நெடுஞ்சாலை 5 இல் ஒரு பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டது.  Freiburg இல் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் படி, Einmeldingen (D) அருகே இரவு 10:40 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன.  ஃபோர்டு ஃபீஸ்டா என்ற விபத்து வாகனத்தின் 59 வயது ஓட்டுநருக்கு, எந்த ஒரு ஆன்-சைட் உதவியும் உடனே கிடைக்கவில்லை. மிகவும் தாமதமாக வந்தது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மற்றொரு வாகனமான போர்ஷே காரை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் சிக்கிய இரு வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.  விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, இது தொடர் விசாரணைகளுக்கு உட்பட்டது. விபத்து தொடர்பான விசாரணைகளை வெயில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  விபத்து ...

திருகோணாமலை நிலாவெளி இலுப்பைக்குளத்தில் விகாரைகளை அமைப்பதால் சிக்கல்கள் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்தொண்டமான் தேரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

Image
  திருகோணாமலை நிலாவெளி இலுப்பைக்குளத்தில் விகாரைகளை அமைப்பதால் சிக்கல்கள் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்தொண்டமான் தேரர்களுக்கு தெளிவுபடுத்தினார். திருகோணமலை நிலாவெளி இலுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, இதனால் இனமுறுகல்கள் ஏற்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக பல அரசியல்வாதிகள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் ஆளுநருடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார். பலாங்கொடை மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான அம்பருக்காஹரம விகாரையின் கிளை விகாரையாக நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள விகாராபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்தார். பலாங்கொடை மிரிஷ் வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் விகாரபதி அமரபுர மஹா நிக்காய வணக்கத்திற்குரிய சங்கநாயக கர...

இன்றைய வானிலை !

Image
இன்றைய வானிலை ! மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்று: காற்று தென்மேற்கு திசையில்  மணிக்கு 25 தொடக்கம் 35  கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். கடல்:  கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும...