கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு !

கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு ! தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதற்குத் தீர்மானித்து, அதனை அவர்களாகத் தயாரித்துவிட்டு, கையெழுத்துக்கோரி எமது மேசையில் வைத்திருக்கும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என்று நாம் தீர்மானித்திருக்கிறோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவின் கூட்டம் சனிக்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,துரைராசா ரவிகரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையசரன், கிழக்கு மாகாணசபை முன...