Posts

கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு !

Image
  கஜேந்திரகுமார் தரப்பு ஐ.நா.கடித்தில் கையெழுத்திடப்போவதில்லை - இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவிப்பு ! தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதற்குத் தீர்மானித்து, அதனை அவர்களாகத் தயாரித்துவிட்டு, கையெழுத்துக்கோரி எமது மேசையில் வைத்திருக்கும் கடிதத்தில் கையெழுத்திடுவதில்லை என்று நாம் தீர்மானித்திருக்கிறோம் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவின் கூட்டம் சனிக்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,துரைராசா ரவிகரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையசரன், கிழக்கு மாகாணசபை முன...

வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக கடுமையான சிக்கல்கள் !

Image
  வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக கடுமையான சிக்கல்கள் ! சுகாதார அமைச்சின் வைத்திய பிரிவின் நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தர வைத்தியர்களின் வருடாந்திர இடமாற்றங்கள் தொடர்பாக பல கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அதன்படி, சுகாதார அமைப்பில் தேவையற்ற சிக்கல் உருவாக்கப்படுவதாகவும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். இந்த இடமாற்ற நடைமுறைகள் நிறுவன குறியீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்படடுள்ளதாக கூறிய வைத்தியர் சமில் விஜேசிங்க, சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரிவின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இந்த சிக்கல்கள் இப்போது எழுந்துள்ளன என்றும் கூறினார். இதன் விளைவாக, நாட்டில் சுமார் 23,000 வைத்தியர்களின் இடமாற்றங்கள் தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட தர வைத்தியர்களின் இடமாற்றங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று வைத்தியர் கூறினார். அத்துடன் நாட்டில் சுமார் 50% வைத்தியர்கள் தற்போது அவர்களுக்கு உரி...

வவுனியா நெடுங்கேணியில் வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கை) உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு

Image
 வவுனியா நெடுங்கேணியில் வீட்டிற்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கை) உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம்  பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டுக்கு செல்லும் நடைபாதையில் ( ஒழுங்கையில் ) நித்திரை செய்துகொண்டிருந்த போது அவரது மைத்துனரால் செலுத்தப்பட்ட ரிப்பர் வாகனம் குறித்த குடும்பஸ்த்தர் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலையே உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருகையில் தனது வீட்டுக்கு செல்லும் ஒற்றையடி நடைபாதையில் (ஒழுங்கையில்) நேற்றிரவு படுத்து உறங்கிய இளைஞனை கவனிக்காத  ரிப்பர் ரக வாகனத்தைச் செலுத்தி வந்த மைத்துனர் வீடொன்றில் சல்லிக்கல்லினை பறித்துவிட்டு வாகனத்தை திருப்பியுள்ளார். இரவு நேரமாகையால் குறித்த ஒழுங்கையில் இளைஞன் படுத்திருந்ததை அறிந்திருக்காத நிலையில்  வாகனம் ஒழுங்கையில் படுத்திருந்த இளைஞன் மீது ஏறியுள்ளது. இன்று காலையிலே குறித்த இளைஞன் வாகனத்துள் நசுங்கி நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதை அறிந...

இஸ்ரேலியர்களால் அறுகம்பை சுற்றுலா தொழிற்துறை பாதிப்பு !

Image
  இஸ்ரேலியர்களால் அறுகம்பை சுற்றுலா தொழிற்துறை பாதிப்பு ! சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர். சுற்றுலா விசாவில் வந்து நாட்டில் வணிகம் செய்த பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறுகிறார். இஸ்ரேலியர்கள் இந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச DJ ஒருவர் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்த நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச DJ டொம் மோங்கல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அறுகம்பை பகுதிக்குச் சென்றபோது, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் சென்றது போன்ற அனுபவம் தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். அறுகம்பை பகுதி முழுவதும் இஸ்ரேலியர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்பியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறியுள்ளார். அறுகம்பை நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இதற்கு முக்கிய காரணம், அறுகம்பை கடல் பகுதி சர்ஃபிங்கிற்...

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை !

Image
  செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை ! செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு: மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால், கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும். காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்ச...

ஆளடியன் அடித்து அப்பாவி குடும்ப பெண் மரணம்.

Image
 ஆளடியன் அடித்து அப்பாவி குடும்ப பெண் மரணம். கிளி-பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார் சக்கிலில்  சென்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை,  பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு !

Image
  இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு ! இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த மேற்படி மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் இலங்கை மக்களின் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை முடிவுகள், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படா மல் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.