Posts

Showing posts from July, 2025

ஆளடியன் அடித்து அப்பாவி குடும்ப பெண் மரணம்.

Image
 ஆளடியன் அடித்து அப்பாவி குடும்ப பெண் மரணம். கிளி-பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார் சக்கிலில்  சென்றுகொண்டிருந்த குடும்ப பெண்ணை,  பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு !

Image
  இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு ! இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த மேற்படி மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் இலங்கை மக்களின் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை முடிவுகள், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படா மல் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் கடத்தல் - ஒருவர் கைது

Image
  மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் கடத்தல் - ஒருவர் கைது மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில், சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த ஒருவர், காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாநாயக்கா தெரிவித்ததாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கிய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, அனுமதிப் பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரம் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து உழவு இயந்திரத்தை இயக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் உழவு இயந்திரத்துடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பு !

Image
  சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பு ! தேசிய சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இவ்வருடம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச சம்பளமாக 27,000 ரூபாவும் மற்றும் நாளாந்த சம்பளமாக 1,080 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வட்டலியெட்டா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டின் இலக்கம் மூன்றின் கீழான தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத் திருத்தத்தின் பிரகாரம், சகல ஊழியர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு ஏற்புடையதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு அமைவாக பட்ஜட் நிவாரணமாக வழங்கப்பட்ட 1,080 ரூபா சகலரதும் திருத்தப்பட்ட சம்பள அமைப்பில் இணைக்கப்பட வேண்டும் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 3,500 ரூபா நிவாரணத்துடன் மாதந்தோறும் 17,500 ரூபவை சம்பாதிக்கும் ஒரு ஊழியர் இதற்கமைவாக தற்போது 27,000 ரூபாவை குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளமாகப் பெறுவதற்கு உரித்துடையவர் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட...

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர் போதைப்பொருட்களுடன் கைது

Image
  அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர் போதைப்பொருட்களுடன் கைது மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர தெற்கு பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் ஹோகந்தர தெற்கு பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் என தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 265 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்கத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மாலம்பே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் சாரதிகள் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம் !

Image
  ரயில் சாரதிகள் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம் ! பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ, இந்த வேலைநிறுத்தம் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் நடைபெறும் எனத் தெரிவித்தார். நிர்வாகப் பிரச்சினைகள், பணி நிலைமைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சாரதிகள், தங்களது பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று (28) ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படவில்லை என சந்தன வியந்துவ தெரிவித்தார்.

மனைவி மரணித்து மூன்றாவது நாளில் கணவனும் மரணம்; ஓட்டமாவடியில் சோகம்!

Image
 மனைவி மரணித்து மூன்றாவது நாளில் கணவனும் மரணம்; ஓட்டமாவடியில் சோகம்! மனைவி மரணமடைந்து மூன்று நாட்களின் பின்னர் கணவரும் மரணமடைந்த சோகச் சம்பவமொன்று ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி - 1 ஆம் வட்டாரம் மஸ்ஜித் கலீபா உமர் வீதியில் வசித்து வந்த ராவியத்தும்மா என்பவர் (25) வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார். இந்நிலையில், அவரது கணவர் சுலைமா லெப்பை அலியார் என்பவர் (27) ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். இந்த தொடர் மரணச் சம்பவம் அந்தக் குடும்பத்திற்கும், பிரதேசத்திற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகைகளை திருடிய காதலி கைது

Image
  காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகைகளை திருடிய காதலி கைது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரிக் ரொக் சமூக வலைத்தளத்தில் தனது காணொளிகளைப் பதிவேற்றி, பிரபலமாகத் தன்னைக் காட்டிக்கொண்டு வந்துள்ளார். இவர் ரிக் ரொக் மூலம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு அறிமுகமாகி, அவரை காதலித்து வந்துள்ளார். அந்நிலையில், தனது காதலனுக்கு அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்காகவும், அவருக்கு சொகுசு வாழ்க்கையை வழங்குவதற்காகவும், யுவதி தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகைகளைத் திருடி, காதலனிடம் வழங்கியுள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக, யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரித்தனர். அப்போது, யுவதி தான் ந...

மாடியில் இருந்து விழுந்து பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு !

Image
  மாடியில் இருந்து விழுந்து பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு ! பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பீடத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்ததாகவும், கட்டிடத்திற்கு அருகில் கிடந்த அவரது உடல் காலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட தர்மசீலன் ரகுராஜ் (34) ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டிருந்தார். விபத்துக்கான சூழ்நிலைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாடு கடத்தப்பட்ட நிலையில் வெலிகம சஹான் கைது!

Image
  நாடு கடத்தப்பட்ட நிலையில் வெலிகம சஹான் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு (28) நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இவர், பாணந்துறை மற்றும் களுத்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் “பத்தே சுரங்க” என்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் முக்கிய சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் ஒரு ஒப்பந்தக் கொலையாளி என்றும் குறிப்பிடப்படுகிறது. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Image
  வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.   இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித சேதமோ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை.  தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு - பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேர் பலி

Image
  நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு - பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேர் பலி நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் நேற்று (28) மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிதாரியான ஷேன் தமுரா , 27 வயதுடைய லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர். AR-15 வகை துப்பாக்கி மற்றும் குண்டு துளைக்காத ஆடை அணிந்து, 44 மாடிகள் கொண்ட கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் முதலில் கட்டடத்தின் முதல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 33-ஆவது தளத்திற்குச் சென்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஒருவரும் மற்றும் நான்கு பொதுமக்கள் அடங்குவர். மேலும், ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் - ஜனாதிபதி

Image
  மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் - ஜனாதிபதி மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கும் எனது ப...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் இரண்டு சீன பிரஜைகள் கைது !

Image
  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் இரண்டு சீன பிரஜைகள் கைது ! சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சீன பிரஜைகள் கடந்த வியாழக்கிழமை (24) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவனகெட்டிய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சீன பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 42 வயதுடைய இரு சீன பிரஜைகள் ஆவார். கைதுசெய்யப்பட்ட இரு சீன பிரஜைகளில் ஒருவரிடமிருந்து 800 வெளிநாட்டு சிகரட்டுகளும் மற்றையவரிடமிருந்து 600 வெளிநாட்டு சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் நாளை உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Image
  மட்டக்களப்பில் நாளை உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா நுண்கலை பீடத்தில் நடைபெறும். இந்தத் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் திறமை செலுத்திய ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அண்மையில் வட மாகாணத்தில் தொடங்கப்பட்டது.அதன் முதல் நிகழ்வு கிளிநொச்சியிலும், இரண்டாவது நிகழ்வு தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மாத்தறை மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் மூன்றாவது நிகழ்ச்சி கிழக்கை மையமாகக் கொண்டு நடைபெறுவதோடு அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த உயர்தரத்தில் ச...

மதுபோதையில் 20 பேர் கொண்ட குழு அடாவடி - 8 பேர் கைது !

Image
  மதுபோதையில் 20 பேர் கொண்ட குழு அடாவடி - 8 பேர் கைது ! மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா ஆலயத்தின் மகிமைமிக்க மாதா சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா ஆலயத்தின் மாதா சுருவத்தை மதுபோதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு குறித்த ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸாரின் துரித நடவடிக்கையை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் கைதானவர்களின் தகவலின் அடிப்படையில் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளை அடுத்து குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் - தேசிய ம...

பெற்றோலியக் கூட்டுத்தாபன கடன்கள் செலுத்தப்பட்டதும் எரிபொருள் விலைகள் குறையும் -அமைச்சர் குமார ஜயக்கொடி !

Image
  பெற்றோலியக் கூட்டுத்தாபன கடன்கள் செலுத்தப்பட்டதும் எரிபொருள் விலைகள் குறையும் -அமைச்சர் குமார ஜயக்கொடி ! பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு கடனாக வழங்க வேண்டிய ரூபா 884 மில்லியனை செலுத்துவதற்காக ஒரு லீற்றர் எரிபொருளில் 50 ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இக்கடனை செலுத்தி முடிவுற்றதும் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இக்கடனில் சுமார் அரைவாசியை இதுவரை மீள செலுத்தி உள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார். கடந்த காலங்களில் எரிபொருள் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமது கேள்வியில், எரிபொருள் கொள்வனவில் கடந்த காலங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், கொள்வனவின் போது துறை சார்ந்த அமைச்சராக இருந்த கஞ்சன விஜேசகரவின் ...

அரச உறுப்பினர்களின் வீடுகளிலும் துப்பாக்கிச் சூடு: அவர்களும் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களா? – நாமல் ராஜபக்‌ஷ !

Image
  அரச உறுப்பினர்களின் வீடுகளிலும் துப்பாக்கிச் சூடு: அவர்களும் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களா? – நாமல் ராஜபக்‌ஷ ! நாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலேயே நடப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியென்றால் அவர்களும் அந்தக் குற்றக்கும்பல்களுடன் தொடர்புடையவர்களா? என கேட்கிறோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், பாதாள குழுக்களுக்கு இடையிலான பிரச்சினையால் திட்டமிட்ட குற்றங்கள் நடப்பதாக அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் வெலிகம பகுதியில் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட...

காதலியை கழுத்தறுத்து கொ லை செய்து விட்டு காதலனும் உயிர்மாய்ப்பு !

Image
  காதலியை கழுத்தறுத்து கொ லை செய்து விட்டு காதலனும் உயிர்மாய்ப்பு ! அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக  செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் 23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

Image
  மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபரை தலா 2.5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடரும் சோதனை நடவடிக்கை - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Image
  தொடரும் சோதனை நடவடிக்கை - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளில் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் முப்படைகள் இணைந்து நேற்றும் (21) பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 73,000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது, 24,690 பேர் சோதனை செய்யப்பட்டதுடன், 9,717 வாகனங்கள் மற்றும் 7,637 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 461 கிராம் 866 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 401 கிராம் 416 மில்லி கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த 20 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 02 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த விசேட சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக...

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு !

Image
  இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு ! கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் வகையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதில் ஆர்வம் காட்டுகின்ற கொரியாவின் உள்ளுராட்சி நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்கும் 2025.02.19 ஆம் திகதி மற்றும் 2025.07.01 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொரியாவின் போசோங்க் உள்ளுராட்சி நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கையில் பருவகால தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் மற்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகாலம் (உயர்ந்தபட்சம் 08 மாதங்கள் வரை) போசோங்க் ப...

இலங்கையில் காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பு

Image
  இலங்கையில் காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பு இலங்கையில் காயங்களால் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயங்கள் காரணமாக ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, 15 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களே காயங்களால் பெரும்பாலும் உயிரிழக்கின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இவ்வாறான காயங்கள் பெரும்பாலும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியாக செயற்படுவதன் மூலம் தவிர்க்கக்கூடியவை. குறிப்பாக, காயங்கள் ஏற்பட்டதும் உடனடியாக அடிப்படை முதலுதவி அளிப்பது மனித உயிர்களை காப்பாற்றுவதிலும் சிக்கல்களை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகத் துறையினரும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. விபத்துகளின் மூலக் காரணங்களைப் பற்றியும், முதலுதவியின் அவசியத்தை பற்றியும் மக்களிடையே எடுத்துரைப்பது பாதுகாப்பான சமுதாயத்திற்கான கட்டமைப்பை உருவாக்க உதவும் என ...

மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் கைது

Image
  மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் கைது முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் - நளிந்த ஜயதிஸ்ஸ

Image
  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் - நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கேள்வி - உரிமைச் சட்டம் ஏதேனும் ஒரு வகையில் திருத்தப்பட்டு, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டால், முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான வசதிகள் வழங்கப்படாவிட்டால், அரசாங்கம் அந்தப் பொறுப்பை எவ்வாறு ஏற்கும்? "இங்கே, நாங்கள் யாருக்கும் விசேடமாக எதையும் செய்வதில்லை. தற்போது உயிருடன் உள்ள ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் குறித்து நாங்கள் பொதுவான முடிவு ஒன்றை எடுத்தோம். முன்னா...

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு

Image
  செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.   செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தேடிக் கண்டறிவதற்காக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டம்” (AI Singapore) உடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது. அதற்காக இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை முறைமைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த ஆய்வுகளை ஆரம்பித்தல், செயற்கை நுண்ணறிவு நிகழ்ச்சித்திட...

இன்று அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் பூமி !

Image
  இன்று அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் பூமி ! இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல குறுகிய நாட்களை கொண்டிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் (22) ஆகஸ்ட் 5ஆம் திகதியிலும் பூமி அதிவேக சுழற்சிக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் வரையிலான குறுகிய மாற்றம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது மனிதர்களால் பார்க்க முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 9 ஆம் திகதி அன்று, பூமி இதுவரை பதிவு செய்யப்படாத மிகக் குறுகிய நாட்களில் ஒன்றையும் பதிவு செய்திருந்தது. சந்திரனின் தற்போதைய சுற்றுப்பாதை நிலை பூமியின் சுழற்சியை நுட்பமாகத் துரிதப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றம் சந்திரன் மற்றும் சூரியனால் செலுத்தப்படும் ஈர்ப்பு விசை, பூமியின் மேற்பரப்பின் புவியியல் செயல்பாடு, காற்றின் வடிவங்கள் மற்றும் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த மூன்று நாட்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாட்களா...

ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை - இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு !

Image
  ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை - இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ! இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.    இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னர் முன்பிணையில் தன்னை விடுவிக்கக் கோரி ரொஹான் பிரேமரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான அதிகாரி இதனைத் தெரிவித்தார். அதன்படி, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மனுதாரரின் சட்டத்தரணியிடம் நீதவான் தெரிவித்தார்.