
பள்ளிவாயல்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் -19 வழிகாட்டல்கள் விபரம். சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும் / பொறுப்பாளர்களுக்கும் பள்ளிவாயல்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் 19 வழிகாட்டல்கள் 23.04.2021 திகதியிடப்பட்ட ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள பொது நடவடிக்கைகள் தொடர்பான மாற்றப்பட்ட வரையரைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை வக்பு சபை பின்வரும் வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்துப் பள்ளிவாயல்களையும் பணிக்கின்றது: 1. ஒரு நேரத்தில் பள்ளியில் ஒன்றுகூடக் கூடியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 50 நபர்களாக இருக்க வேண்டும். 2. குறிப்பிட்ட 50 நபர்களை தெரிவு செய்யும் முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். 3.எல்லா நேரங்களிலும் முகக் கவசம் (face mask) கட்டாயமாக அணிந்திருத்தல் வேண்டும். 4. எல்லா நேரங்களிலும் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவது கட்டாயமாகும். 5. எல்லா நேரங்களிலும் தொழுகை விரிப்பைப் பாவிப்பது கட்டாயமாகும். 6. வீட்டில் வுழூ செய்த...