புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு போராட்டம் !

புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு போராட்டம் ! சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி கல்விமைச்சின் முன்பாக பெற்றோர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.