பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட தலைவர் ரணிலுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் தயார்- சாந்த பண்டார !

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட தலைவர் ரணிலுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் தயார்- சாந்த பண்டார ! பயங்கரவாதத்தை தோல்வியுறச்செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தமைக்கு நன்றிக் கடனாக நாட்டு மக்கள் 2005 ஆம் ஆண்டு நிபந்தனைகள் எதுவுமின்றி இன, மத பேதங்களைக் கடந்து மஹிந்த ராஜபக் ஷவை ஜனாதிபதியாக்கினர். அதேபோன்று, தற்போது நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து நன்றிக்கடன் செலுத்த தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, “இயலும் ஸ்ரீலங்கா” மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று முன்தினம் நாரம்மல நகரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 37 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கு நன்...