Posts

Showing posts from January, 2025

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி !

Image
  மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி ! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சோ. சேனாதிராஜாவின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி இன்று (30) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாவை சேனாதிராஜா அரசியலில் கடந்து வந்த பாதை !

Image
  மாவை சேனாதிராஜா அரசியலில் கடந்து வந்த பாதை ! அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா எனஅழைக்கப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்தார். வீமன்காமம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், நடேஸ்வராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் அவர் கற்ற பின்னர், இலங்கைப் பல்க லைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 முதல் 1983 வரையான காலப் பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார். 1977 இல் மாவை சேனாதிராஜா மண மகளாக தமது உறவு முறை பவானி என்பவரைத் திருமணம் முடித்தார். 1972 இ...

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கான்ஸ்டபிள் பணிநீக்கம் !

Image
  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கான்ஸ்டபிள் பணிநீக்கம் ! இரத்மலானை பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தியதோடு, முச்சக்கர வண்டி மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய பொலிஸ் ஜீப்பும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகும் காட்சியும், பின்னர் ஜீப் நிற்காமல் தொடர்ந்து செல்வதை காட்டும் காணொளியொன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது. இந்தச் சம்பவம் 28.01.2025 அன்று இரத்மலானை பகுதியில் இடம்பெற்றதாகவும், அதே நாளில் கல்கிஸை பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஜீப் வாகனத்தை செலுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அவர் மது போதையில் வாகனம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டதோடு, சந்தேக நபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா ; இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் !

Image
  தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா ; இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் ! தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மாவை சேனாதிராஜா தனது 19 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கி 83 வயது வரை முழுநேர அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக பணியாற்றியுள்ளார். போருக்கு முன்னரும் பின்னரும் என இவரது அரசியல் நகர்வுகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட காலத்திலும் இவரது பணி காத்திரமாக இருந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா. அன்னாரின் இழப்பு தமிழர்களின்  அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் மிக நெருங்கிய உறவு இருந்தது. அமரர் சௌமி...

மட்டக்களப்பில் இரவில் பஸ்ஸில் தனித்திருந்த 15 வயது சிறுமி : பொலிஸார் விசாரணை !

Image
  மட்டக்களப்பில் இரவில் பஸ்ஸில் தனித்திருந்த 15 வயது சிறுமி : பொலிஸார் விசாரணை ! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பயணிக்கக் காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்த 15 வயது சிறுமியை செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த சிறுமியே பஸ்ஸில் தனித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர், தந்தையின் பராமரிப்பில் இருந்துவந்த இச்சிறுமி, நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறி, கல்முனையில் இருந்து பொலன்னறுவைக்கு பயணிக்கும் தனியார் பஸ்ஸில் ஏறியுள்ளார். அந்த பஸ்ஸின் சாரதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பஸ்ஸை நிறுத்திவிட்டு, பஸ்ஸினுள் இருந்த நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர், பஸ்ஸில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியை அவதானித்த ஒருவர் சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, பொலிஸார் அந்த பஸ்ஸில் அமர்ந்திருந்த சிறுமியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, விசாரித்துள்...

படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த காதலியை கழுத்தறுத்து கொ லை செய்த காதலன் !

Image
  படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த காதலியை கழுத்தறுத்து கொ லை செய்த காதலன் ! ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, எலபத பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்லபட கரங்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில், புதன்கிழமை (29) காலை 29 வயதான பட்டதாரி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி, எலபத, தெல்லபட பகுதியைச் சேர்ந்த சந்திமா ஹர்ஷனி குணரத்ன என்ற 29 வயது இளம் பெண்ணும், களனி பல்கலைக்கழக மாணவியுமான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு !

Image
  சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு ! 2024 ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 2023 ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரித்த 167 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளதாகவும் கூறினார். 2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது, ​​குறிப்பிடத்தக்க குறைவு அல்லது அதிகரிப்பு எதுவும் இல்லை." உதாரணமாக, இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக பதிவாகின்றது. இதில் 16 வயதிற்கு குறைந்த காதால் உறவால் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே பெரும்பாலானவை ஆகும். அதாவது இது விருப்பப்படி நடப்பவையாகும். 2023 இல் 1,237வும் 2024 இல் 1,254வும் பதிவாகியுள்ளன. ஆனால் 2023 இல் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்ப...

நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு ஆளும் தரப்பினர் தற்போது திணறி வருகின்றனர்.

Image
  நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு ஆளும் தரப்பினர் தற்போது திணறி வருகின்றனர். நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும் போது மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்த்த எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு ஆளும் தரப்பினர் தற்போது, திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தின் பேச்சுக்கள் நன்றாக இருக்கின்றது. ஆனால் செயல் பலவீனமாகவும் மெத்தன போக்கிலும் காணப்படுகின்றன. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மாற்றுவழி இந்த அரசிடம் இல்லை. மக்களின் வ...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனத்துடன் மூவர் கைது !

Image
  சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனத்துடன் மூவர் கைது ! சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் ஒன்றுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி, அங்கம்மன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் 43, 45 மற்றும் 47 வயதுடையவர்கள் ஆவர். மேலும், சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை (29) இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்த வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது !

Image
  அக்கரைப்பற்றில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது ! அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதரியா வீதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்குச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 370 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (29) அன்று ஆஜர்படுத்திய போது பெப்ரவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் உயிரிழப்பு !

Image
  குளவிக்கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவன் உயிரிழப்பு ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 8 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், அவர்களில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றதாக புஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள மரமொன்றில் கட்டப்பட்ட குளவிக்கூட்டில் இருந்த குளவிகளின் தாக்குதலுக்கே இந்த 8 பேரும் இலக்காகியுள்ளனர். புஸல்லாவை பிளாக் பொரஸ்ட் பெருந்தோட்டத்தில் வசித்துவந்த, புஸல்லாவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற மாணவனே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவனின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உட்பட 8 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியதையடுத்து, அவர்களில் ஆறு பேர் கம்பளை, வஹுகபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த மாணவன் தனது சகோதரருடன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது குளவிக்கொட்டு தாக்குதல் இடம்பெற்றதையடுத்து, அயலவர்களின் உதவியுடன் குளவிகள் தீ வைத்து விரட்டப்பட்டன. அதன் பின்னர், காயமடைந்தவர்களை சிலர் மருத்துவமனைக்கு கொண்...

வரவிருக்கும் பட்ஜெட்டில் 1.35 டிரில்லியன் ரூபாவை அரசாங்க முதலீட்டு மூலதனச் செலவினங்களாக செலவிட எதிர்பார்க்கிறோம் : ஜனாதிபதி !

Image
  வரவிருக்கும் பட்ஜெட்டில் 1.35 டிரில்லியன் ரூபாவை அரசாங்க முதலீட்டு மூலதனச் செலவினங்களாக செலவிட எதிர்பார்க்கிறோம் : ஜனாதிபதி ! உலகம் அறிக்கைகளால் முன்னேறிச் செல்லவில்லை. தற்போது அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளால் முரண்பாடு அல்லது அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாகலாம் என்று கருத முடியும். ஆனால் உலகம் அறிக்கைகளோடு நின்று விடாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சுதந்திரமான சந்தை என்று கூறினாலும் உலகில் சந்தை சுதந்திரமானதாக இல்லை. உலகச் சந்தை பிரிந்து வேறுபட்டுள்ளது. அவ்வாறு பிரிந்து கிடக்கும் சந்தையில் நமது பங்கை கையகப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதற்காக, இலங்கைக்கு நெருக்கமான இந்தியாவின் சந்தையுடன் உலக சந்தையை அணுகுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவுடனான முன்னைய வர்த்தக ஒப்பந்தத்தை ஆராய்ந்து, அதன் நன்மை, தீமைகளைக் கருத்தில் கொண்டு, புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உலகச் சந்தையின் பங்கைப் கைப்பற்ற எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும்போதே ஜ...

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் !

Image
  மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் ! மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார். பல மணிநேரம் கடந்தும் அவர் மேலே வராத காரணத்தால், அங்கிருந்த இளைஞர்கள் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காதலால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி !

Image
  காதலால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி ! இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு குழுக்களிடையே‌ ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்‌ பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவ தினம் பிரதேசத்திலுள்ள இவ்விரு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி‌ கிராம சேவையாளர்ரின் தலைமையில் இப்பகுதியில் உள்ள பிரதான வீதியொன்றை "தூய்மையான இலங்கை" ‌வேலைத்திட்டத்தின் கீழ் ‌சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது சுமார் 100 பேர் கலந்து‌ கொண்ட இச்சிரமதானத்தில் பெரும்பான்மை இன ‌ பெண் ஒருவரை காதலித்த தோட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் தந்தையும் அந்த பெண்ணின் தாத்தாவும் கலந்து கொண்டுள்ளனர் . இவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதன் போது பெண்ணின் தாத்தா சிரமதான பணிக்கு கொண்டு வந்த மண் வெட்டியால் தலையில் தாக்கியதில் தமிழ் இளைஞனின் தந்தை தலையில் பலத்த காயம் மேற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள...

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேர்க்க நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் !

Image
  டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேர்க்க நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் ! டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, டிஜிட்டல் அடையாள அட்டை நிதி நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளையும் வரி செலுத்துதலையும் எளிதாக்கும் என்று குறிப்பிட்டார். "எங்கள் அடையாள அட்டை இப்போது கொஞ்சம் பழையது, இப்போது அடையாள அட்டையை எடுத்துச் சென்றால் இது நீங்களா என்பார்கள்? ஆனால் டிஜிட்டல் அடையாள அட்டை அப்படியில்லை. உங்களுக்கு ஒரு டிஜிட்டல் அடையாள அட்டை கொடுக்கப்பட்டால், அதைப் படிக்க முடியும். வரி செலுத்துவதற்கும், வங்கிகளுடனான பரிவர்த்தனைகள் முதல் அனைத்தையும் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம். டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்க 1,000 கோடி ரூபா உதவியை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா தரவுகளைத் திருடப் போகிறது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை. இலங்கையின் மிகச்சிறந்த தரவு அறிவியல் நிபுணர்களுடன் 24 ஆம் த...

வாழைச்சேனையில் சகோதரனை கு த் தி க் கொ ன் ற சகோதரன் தலைமறைவு !

Image
  வாழைச்சேனையில் சகோதரனை கு த் தி க் கொ ன் ற சகோதரன் தலைமறைவு ! கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது. உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதில், தம்பிக்காரன் தனது 43 வயதுடைய சகோதரனை குத்திக் கொலை செய்துள்ளார். கத்திக் குத்துக்கு இலக்கான நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சகோதரனை குத்திக் கொன்ற சகோதரன் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஓட்டமாவடியில் ரயிலில் மோதி நபரொருவர் படுகாயம் !

Image
  ஓட்டமாவடியில் ரயிலில் மோதி நபரொருவர் படுகாயம் ! புகையிரத வண்டியில் மோதி நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் ஓட்டமாவடி பகுதியில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது நபர் ஒருவர் புகையிரத பாதையை கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், காயமடைந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்கள் !

Image
  சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை கொள்கலன்கள் ! கட்டாய சோதனை என அடையாளம் காணப்பட்ட சுமார் 323 கொள்கலன்கள் முறையான சோதனையின்றி விடுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொள்கலன்களுக்கு சிவப்பு முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் கூட்டமைப்பின் தலைவர் அமில சஞ்சீவ ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார். தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத மருந்துகள், மனித பயன்பாட்டிற்குத் தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், சட்டவிரோத சிகரெட்டுகள் அல்லது போதைப்பொருள்கள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவற்றை உள்ளடக்கியதான பிரச்சனைக்கு இந்த கொள்கலன்கள் இருந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்த அவர், யாருடைய அதிகாரம் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி !

Image
  உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி ! ஹட்டன் நகர மையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் கரப்பான் பூச்சி இருப்பது செவ்வாய்க்கிழமை (21) கண்டறியப்பட்டது. அந்த உணவக உரிமையாளருக்கு எதிராக, இந்த மாதம் 31 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​தட்டில் இறந்த கரப்பான் பூச்சி இருப்பதாக உணவக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாடிக்கையாளர் காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஹட்டன் காவல்துறை அதிகாரிகள் உணவகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விடயம் குறித்து ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு அறிவிக்கப்பட்டது. பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகத்தை சுகாதாரமற்ற முறையில் பராமரித்தல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எட...

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை வெள்ளத்தில் ..! கற்றல் நடவடிக்கை ஸ்தம்பிதம்!!

Image
  அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை வெள்ளத்தில் ..! கற்றல் நடவடிக்கை ஸ்தம்பிதம்!! (வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை வெள்ளத்தினால் முற்றுமுழுதாக சூழ்ந்துள்ளது . இன்று (22) புதன்கிழமை பெய்த கனமழையையடுத்து வெள்ளம் பாடசாலையில் புகுந்துள்ளது. பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்து.  பாடசாலை அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்திடம் கேட்டபோது ..பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபம் நூலகம் உள்ளிட்ட பல கட்டடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாடசாலைக்கு மாணவர் வரவு வெகுவாக குறைந்திருந்தது வந்த மாணவர்களையும் வெள்ள அபாயம் கருதி  பெற்றோர்கள் அழைத்து சென்றனர். எனினும் கபொத. சா.த. / உ.தர விசேட பரீட்சைகள் நடைபெற்றன. பாடசாலையில் தாழ்நில பகுதி அனைத்து வகுப்பறைகளிலும், பாடசாலை நூலகம், பிரதான மண்டபம் என்பன நீரில் மூழ்கி காணப்படுகிறது. பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் அறிவித்துள்ளோம் என்றார்.

மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி !

Image
  மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி ! ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆவார். விசாரணையில், சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த பலா மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​பலா மரத்தின் ஒரு கிளை அருகிலுள்ள மின் கம்பியில் மோதியதில், சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதன்போது சிறுவன் மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலா மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக சிறுவனை அனுப்பிய 62 வயதுடைய அயல் விட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சி !

Image
  மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சி ! சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறு இருப்பினும் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.77 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து பேஸ்புக் ஊடாக நிதிமோசடி !

Image
  உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து பேஸ்புக் ஊடாக நிதிமோசடி ! மோசடியாக பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (21) இந்நாட்டிற்கு வந்தபோது, ​​கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபர் உறவினர் போல் தன்னை காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கின் ஊடாக, மூன்று சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 700,000 ரூபாயை வைப்பிலிடச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை தணிக்கை செய்தபோது சந்தேக நபரை பொலிசார் அடையாளம் கண்டனர். சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, அவர் கட்டாரில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டதுடன், நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி...