Posts

Showing posts from January, 2023

கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு : அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆராய்வு!

Image
கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு : அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆராய்வு! (பாறுக் ஷிஹான்) கல்முனை தலைமையக பொலிஸ் பொலிஸ் நிலையத்திற்கு அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயம் செய்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்திற்கு இன்று (31) சென்றிருந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் கலந்து கொண்டு பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். கல்முனை தலைமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் புத்திக இதனை தொடர்ந்து இவரை கௌரவிக்கும் வகையில் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை வழங்கி வைத்தார். கல்முனை மாநகர பிரதேசத்தை பசுமைத் திட்டங்களின் கீழ் உள்வாங்குவதன் அவசியம் மற்றும் பசுமை தரும் மரங்களை நடுவதன் ஊடாக மக்களுக்கான நன்மைகள் தொடர்பில் வலியுறுத்தி...

இந்த மாத தொடக்கத்தில் 123 ரயில்கள் இரத்து : ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்!

Image
  இந்த மாத தொடக்கத்தில் 123 ரயில்கள் இரத்து : ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்! பல்வேறு காரணங்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையால் 123 ரயில் சேவைகளை இந்த மாத தொடக்கத்தில் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்ததாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்குள் 30 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதைத் தவிர, ரயில் சாரதி உதவியாளர்கள் இல்லாததால் அதிக எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். புகையிரத சேவைகள் இயக்கப்படாமையால் புகையிரத பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 28ஆம் தேதி 27 பயணிகள் ரயில்கள், ஒன்பது எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட 36 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. ஜனவரி 29 அன்று 29 பயணிகள் ரயில்கள், 15 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் என மொத்தம் 44 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. 36 பயணிகள் ரயில்கள் மற்றும் 12 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட 43 ரயில் சேவைகள் நேற்று (ஜனவரி 30) இரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், குறைந்...

வீடு ஒன்றில் காணப்பட்ட குழியிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள்

Image
  வீடு ஒன்றில் காணப்பட்ட குழியிலிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் அக்மீமன ஹியர் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் குழி ஒன்றில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இது தவிர கைவிலங்கு, ஒரு கைவிலங்கு உறை, மற்றும் செயலிழக்கச் செய்யப்பட்ட ஆயுதம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவை மீட்கப்பட்டுள்ளன கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் தோண்டி மூடப்பட்ட அடையாளம் காணப்பட்ட இடங்களை தோண்டியபோதே உறை ஒன்றில் இடப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டன. குறித்த வீட்டின் உரிமையாளர் கொரியாவில் பணிபுரிந்து வருவதோடு, இந்த இடம் அவரால் புதிதாக வாங்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது மேலதிக விசாரணைகளுக்காக அனைத்துப் பொருட்களும் அக்மீமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் ராஜபக்சர்கள் திருடிய பணத்துக்கான வந்தியை மக்களிடமிருந்து அறவிடப்படுகின்றது : சஜித் பிரேமதாஸ!

Image
  அரசாங்கம் ராஜபக்சர்கள் திருடிய பணத்துக்கான வந்தியை மக்களிடமிருந்து அறவிடப்படுகின்றது : சஜித் பிரேமதாஸ! எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும்,தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதாகவே இதற்கு அவர்கள் காரணமாக கூறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது என்பது சாதாரண மக்களுக்கு குறைந்த அழுத்தத்தை கொடுப்பதானதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்தி, ராஜபக்சர்கள் திருடிய பணத்துக்கான வந்தியை மக்களிடமிருந்தே அறவிட்டுக்கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டு மக்கள் மீது எந்த அழுத்தமும் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தை கையாளுமாறே 220 இலட்சம் மக்களும் எதிர்பார்ப்பதாகவும், தற்போதைய ஜனாதிபதியும் ஏனையோரும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தா...

வாக்காளர்களுக்கான அறிவிப்பு!

Image
  வாக்காளர்களுக்கான அறிவிப்பு! முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பார்வைக் குறைபாடு உள்ள வாக்காளர்கள் அல்லது உடல் ஊனமுற்ற வாக்காளர்கள் வரவிருக்கும் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் சென்று வாக்களிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல் ஊனம் காரணமாக நடந்து அல்லது பொது போக்குவரத்து மூலம் வாக்குச்சாவடிக்கு செல்லவோ அல்லது வரவோ முடியாவிட்டால், சிறப்பு போக்குவரத்து வசதிக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல் ஆணைக்கும் வெளியிட்டுள்ளது.

ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடகக்குரல்: நிபோஜனின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இரங்கல்

Image
  ஓய்ந்தது கிளிநொச்சியின் ஊடகக்குரல்: நிபோஜனின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் இரங்கல் கிளிநொச்சியின் ஊடகப் பரப்பில் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்த அன்புத்தம்பி நிற்சிங்கம் நிபோஜனின் திடீர் மரணம் எம் எல்லோருக்கும் தீராப்பெருவலியைத் தந்திருக்கிறது.  மிகச்சொற்ப வயதில், தன்முனைப்பாலும், ஊடகத்துறை மீதான அதீத ஆர்வத்தாலும் அத்துறையின் ஆழ அகலங்களையெல்லாம் அறிந்த ஒருவனாக தன்னைத்தானே தகவமைத்துக்கொண்ட தம்பி நிபோஜன், இத்தனை அகாலத்தில் எமைப்பிரிவான் என நாம் யாரும் நினைத்தேனும் பார்த்ததில்லை.  ஓரிரு மணிநேரங்களின் முன்னர் என்னோடு தொலைபேசியில் உரையாடிய  அந்தக் குரலொலி மறையும் முன்னரே அவனது உயிரும் பிரிந்திருக்கிறது. அண்மைக்காலமாக எமைச் சார்ந்தவர்களிடையே நிகழ்ந்தேறும் ஏற்கவே முடியாத இளவயது மரணங்களின் நீட்சியில் இணைந்துகொண்ட தம்பி நிபோஜனின் ஆத்மா அமைதிபெறட்டும் பாராளுமனர் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது: வானிலை

Image
அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது: வானிலை தென்கிழக்கு மற்றும் அதனை அண்மித்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் போது, ​​திருகோணமலையில் இருந்து 455 கிலோமீற்றர் கிழக்கு-தென்கிழக்கே தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் படிப்படியாக தெற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி, நாளை  முற்பகல் இலங்கையின் கரையை கடக்க வாய்ப்புள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இருப்பினும், பிற்பகல் அல்லது இரவு முழுவதும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீ...

மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் மிகவும் வீழ்ச்சி

Image
  மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் மிகவும் வீழ்ச்சி மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.  சில்லறை விலையில் அத்தகைய குறைப்பு இல்லை என்று தாக வர்த்தகர்கள் கூறிவருகிறார்கள்  எனினும், அதிகளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை வாங்க வியாபாரிகள் வரத்து இல்லாத நிலை உள்ளது.  மேலும், பாரிய ஆலை உரிமையாளர்கள் அநியாயமாக நெல் கொள்வனவு செய்து அதிக இலாபம் ஈட்டும் செயற்பாட்டை அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்கு

Image
  இலங்கை மின்சார சபைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்கு இலங்கை மின்சார சபைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரையிலான உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்கு சமர்பித்த உடன்படிக்கைக்கு இணங்கத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபையின் தலைவர் அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிடுகிறது. உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மேற்படி தரப்பினர் சமரசம் செய்து கொண்ட போதிலும், இலங்கை மின்சார சபை வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் வகையில் தீர்வைப் புறக்கணித்து மின்வெட்டைத் தொடர்ந்ததாக ஆணைக்குழு குற்றம் ...

காதலியை கழுத்தை அறுத்து கொன்ற பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில்

Image
  காதலியை கழுத்தை அறுத்து கொன்ற பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் 24 வயது காதலியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர் பசிந்து சதுரங்க டி சில்வாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (30) உத்தரவிட்டார். சந்தேகநபர் நேற்றைய தினம் (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனவும், அவர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். நேற்று திறந்த நீதிமன்றில் நடைபெற்ற மாணவி சதுரிகா மல்லிகாராச்சியின் மரணம் தொடர்பான முதற்கட்ட நீதவான் விசாரணையின் போது, ​​அவரது தந்தை  கண்ணீருடன் சாட்சியமளித்தார். இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட தனது குடும்பத்தின் மூத்த மகளான சதுரிகா நுகேகொட, அனுலா வித்தியாலயத்தில் உயர்தரப் பாடசாலையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் பிரவேசித்து கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்ததாகவும், அவர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததாகவ...

வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் வாள்கள் மற்றும் தங்கத்துடன் கைது...

Image
  வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் வாள்கள் மற்றும் தங்கத்துடன் கைது... யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த நால்வர் வாள் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் வாள்களுடன் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கி சுமார் 12 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பின்னர், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்ததையடுத்து, யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வைத்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் கொள்ளையர்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாகவும், அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கொள்ளைச் சம்பவங்களிலும் தாக்குதல்களிலும் இவர்கள் பங்குபற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்த...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்

Image
  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சுப் பிழைகளின் துல்லியம் மற்றும் அதில் உள்ள விவரங்களைத் திருத்தம் செய்தபின், தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பமாகும் என்று திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக சுமார் ஏழாயிரம் சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது 

இலங்கையின் பொறுப்புக்கூறல்! அமெரிக்காவின் முனைப்புக்கள்

Image
  இலங்கையின் பொறுப்புக்கூறல்! அமெரிக்காவின் முனைப்புக்கள் இலங்கையின் போர்க்குற்ற பொறுப்புக்கூறல் தொடர்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறையின் தலைவரான தூதுவர் பெத் வான் ஷாக் கடந்த வாரம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். கனடாவிற்கு சென்றிருந்த அவர் அங்கு, தமிழ் புலம்பெயர் குழுக்களைச் சந்தித்தார். இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை,தமிழ் புலம்பெயர்வாளர்களுடன் தாம் நடத்தியதாக அவர் ட்விட் செய்துள்ளார். இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இன்றியமையாதது என்று அவர் தமது ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம், இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயலகம்,இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளை மோசமாகப் பாதித்த பொருளாதாரக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தியதன் விளைவாகவ...

சுதந்திர தினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை?

Image
  சுதந்திர தினத்தில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை? 13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்செய்யப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் கூறியபோது, பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மௌனமாக இருந்தமை இந்த சந்திப்பின் குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்று இன்றைய தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இரண்டு முறை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்த அரசியல்வாதி அமர்வு முழுவதும் அமைதியாகவே இருந்தார். எனினும் அவருக்குப் பின் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவை வெளியிட்டார். இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடலின் போது, பெப்ரவரி 4ஆம் திகதி மூவர் மாத்திரம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இதற்கு அவரது மனைவி விஜயகலா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே அது கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்தவருமான மகேஸ்வரன், 2008 ஜனவரி 1ஆம் திகதியன்று...

இலங்கை கிரிக்கெட் தனுஷ்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

Image
  இலங்கை கிரிக்கெட் தனுஷ்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் அவர், கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அவருக்கு தடை விதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர், தமது பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது. குணதிலக்க தொடர்பில் அவுஸ்திரேலிய சட்ட அமைப்பு என்ன நடவடிக்கை எடுத...

ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காரணத்தால் நடிகை ஜாக்குலினுக்கு துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி

Image
  ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காரணத்தால் நடிகை ஜாக்குலினுக்கு துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி பண மோசடியாளர்  சுகேஸ் சந்திரசேகரின் 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 27 முதல் 30 வரை துபாய்க்கு மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக செல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரிய ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதன்போது ஜாக்குலின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, துபாயில் நடைபெறும் பெப்சிகோ மாநாட்டில் கலந்து கொள்ள நடிகை ஒப்பந்தப்படி கடமைப்பட்டிருப்பதாகவும், அவர் அதைத் தவிர்த்தால் அவர் மீது வழக்கு தொடரப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார். அவர் சமீபத்தில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனையடுத்தே தொழில்ரீதியிலான கடமைகளுக்காக நடிகை ஜாக்குலினை வெளிநாடு செல்ல நீதிபத...

அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் -அனுரகுமார

Image
  அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் -அனுரகுமார Advertisment எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும். . அத்துடன் நாடு செல்லும் பாதையில் ஒரு புதிய திசையாகவும் அமையும் என தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார். கொழும்பி;ல் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,  இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக உள்ளூராட்சித் தேர்தலை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார். ஐந்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக திஸாநாயக்க கூறினார். ஒரு தேர்தலை நடத்துவதில் ஐந்து நிலைகள் மட்டுமே உள்ளன. இதில் தேர்தல் அறிவிப்பது, கட்டுப்பணத்தை பெறுவது,வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்வது, தேர்தல் திகதியை அறிவித்து தேர்தல் நடத்துவது என்ற நான்கு கட்டங்களையும் சீர்குலைக்க அரசாங்கம் முயன்றது, ஆனால் அவை வெற...