Posts

Showing posts from March, 2021
Image
 வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி  மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்திற்கு மிக நீண்ட நாள் தேவையாகக் காணப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  இப்பிரதேசத்தின் ஊட்டல் பாடசாலையாகக் காணப்படும் குறித்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் நன்மைகருதி பல்வேறு தரப்பினரிடமும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நீர் வழங்கல் அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான இணைப்புச்செயலாளர் எஸ்.எம்.சிம்ஷானின் முயற்சியினால் குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.  இதற்கான அனுமதியினை வழங்கிய நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கும் மாவட்ட நீர் வழங்கல் சபையின் பணிப்பாளர் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் இணைப்புச் செயலாளர் நன்றிகளைத் தெரிவிக்கிறார்.
Image
 இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியை இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் கையோடு பிடித்த போது உடனே இலஞ்ச பணத்தை தொண்டையில் விழுங்கிய சம்பவம்!!! பணக்கட்டு தொண்டையில் சிக்கி மூச்சு எடுக்க கஸ்டத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் பொலிஸ் அதிகாரி பேராசை குணத்தால்  கம்பஹா வைத்தியசாலையில் அனுமதி
Image
 நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இணைத்து வடக்கு கிழக்கில் போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலை ஏற்படும்..   தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பெருமளவான மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமையடையாத நிலையில் காணப்படுகின்றது. புதிய அரசாங்கத்தினால் புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்சியாக கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்ளையே குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகளாக தெரிவு செய்து திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மிகுதிப் பணம் கிடைக்காத நிலையில் இன்னும் மக்கள் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அமைச்சர்களிடம் நேரடியாகவும் கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தும் போராட்டங்க...
Image
 கல்முனை மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் .    பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) மாநகர சபை வாகனங்களை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார். PHOTOS : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/3921843047901998  கல்முனை மாநகர சபையின் 36 ஆவது  மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை(30 ) 2.30 மணியளவில்  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் நடைபெற்றபோது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சபை ஆரம்ப நிகழ்வாக சமய ஆராதனையுடன் கடந்த   24.02.2021 அன்று இடம்பெற்ற கூட்டறிக்கையை அங்கீகரித்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முதல்வரின் உரை இடம்பெற்றது. மேலும் நிலையியற்குழுக்கூட்டத் தீர்மானங்கள் அங்கீகரித்தல் தொடர்பில்  ஆராய பட்டதுடன்  இதன்  பொறுப்பு அனைவரிடமும் உள்ளதாக முதல்வரால்  சுட்டிக்காட்டி  ஆராயப்பட்டது. தொடர...
Image
 மகள் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றதுக்கு காரணமான தந்தைக்கு கடூழிய சிறைத் தண்டனை.     திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி குழந்தை பிரசவத்துக்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த சம்பவம் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடமபெற்றதாகவும், கர்ப்பம் தரித்த பின்னரே இவ்விடயம் பொலிஸ் முறைப்பாட்டுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின்போது கர்ப்பமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக வைத்திய கலாநிதி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார். சந்தேக நபரான தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டதாகவும் சிறுமி நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார். இந்நிலையில், சிறுமியின் சாட்சியத்தின் பின்னர் மன்றில் ஆஜராகாது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சந்தேக நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 5 இலட்சம் ரூபா நஷ்ட...
Image
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ஆக அதிகரித்தது.   இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா  202.04 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image
 மோட்டார் சைக்கிள்கள் சோதனை... இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு .   மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பகிக்கப்படவுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிள் சோதனை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் மேற்கொள்ளப்படும் வீதி ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட அவதான செலுத்தப்படவுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
Image
 அமெரிக்க வங்கி கணக்குகளை ஹேக் செய்து பாரிய அளவில் பண மோசடி செய்தவர் கைது.   அமெரிக்க வங்கி கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில்  ஈடுபட்ட 41வயதான சாவகச்சேரியை சேர்ந்த நபரொருவர் இன்று (31) கைது செய்யப்பட்டார். இவரின் தனியார் வங்கி கணக்கில் 13.4 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் அமெரிக்காவிலுள்ள நண்பர்கள் உதவியுடன் நிதியை பெற்றுள்ளது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை குற்றப் புலனாய்வுதுறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். Siva Ramasamy
Image
 மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தொழிலாளர்களுக்கு அரச செலவில் இலவச தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் வழங்கப்படும்.   கோவிட் -19 தொற்றுநோய் பரவல் காரணமாக   மத்திய கிழக்கு மற்றும் வெளிநாடுகளில் சிக்கி . அங்கு  இருந்து நாடு திரும்பும் இலங்கை  தொழிலாளர்களுக்கு இலங்கை அரசு இலவச தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க உள்ளது.  COVID-19 நிலைமை காரணமாகநாடு  திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பிற மருத்துவ, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் தொடர்பான அனைத்து செலவுகளையும் தொழிலாளர் அமைச்சின் ஒரு பிரிவான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)  ஈடு செய்யும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்கள் அங்கிருந்து  புறப்படுவதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்  முறையாக பதிவு  செய்திருக்க வேண்டும். அவ்வாறன  தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் கிடைக்கும்.  அண்மையில் அமைச்சர்  நிமல் சிரிபாலா டி சில்வா, SLBFE க்குள்  ஒரு அ...
Image
 என்னை தாக்கிய அதிகாரி சம்பவ தினத்தின் இரவு என்னை சந்தித்தார். இப்போதும் உங்களுக்கு வலி இருக்கிறதா? என கேட்டார்.   எனக்கு நீதி வேண்டும். இப்படியான அனர்த்தம் வேறு  எவருக்கும் ஏற்படக் கூடாது.” இவ்வாறு தெரிவித்தார் பன்னிப்பிட்டிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளின் தாக்குதலுக்குள்ளான இளைஞர் கலைமகன் ப்ரவீன். அவர் மேலும் கூறியதாவது, நான் ஹப்புத்தளை- பிடரத்மலை-கீழ்ப்பிரிவில் வசித்து வருகிறேன். சுமார் 2 மாதங்களாக குறித்த லொறியில் சாரதியாக கடமையாற்றி வருகிறேன். பண்டாரவளையில் இருந்து மரக்கறி ஏற்றிய லொறியில் தெஹிவளை நோக்கி வந்துக்கொண்டிருந்தேன். இதன்போது பன்னிபிட்டிய பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. மின்விளக்கு சமிக்ஞையை கடந்து செல்லும் போது என்னை அறியாமல் திடீரென தூங்கிவிட்டேன். இதன்போது வீதியிலிருந்து விலகிய வாகனம் வீதியோரத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை நோக்கி சென்றதை அறிந்தேன். என்ன செய்வதென்றே எனக்கு புரியவில்லை. ஆனாலும் எப்படியாவது வண்டியை வீதிக்கு திருப்ப வேண்டுமென நினைத்தேன். ஆனாலும் அந்த அதிகாரியின் மீது வாகனம் லேசாக மோதி எல்லாம் முடிந்துவிட்டது. பின்னர் ஓரி...
Image
 இன்று முதல் தடை செய்யப்படும் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகள்.    உள்நாட்டில் பயன்படுத்தப்படும் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் தடை விதிக்கப்பட்டள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு ஏற்கெனவே அறிவித்துள்ளது.  'குறிப்பிட்ட உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் நாட்டில் தடை அமுல்படுத்தப்படவுள்ளது' என  அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதற்கிணங்க, ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்,20 மைக்ரோனுக்கும் குறைந்த Lunch sheets , உணவு மற்றும் மருந்துகளற்ற Sachet, பக்கெட்கள், Cotton buds மற்றும் காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Image
 மாகாண சபை தேர்தல் குறித்து பீதியடைய வேண்டாமென அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகிறோம்.    மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகுமென தெரிவித்தள்ள  பிக்குகள் முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர், அது தேசிய குற்றமாகும் என்றார். கொழும்பில், நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 'மாகாண சபை அமைப்பு இந்த நாட்டுக்குத் அவசியமான ஒன்றல்ல. அதன் அதிகாரத்தால்  பெறப்பட்டவை ஒன்றுமல்ல' என்றார். இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை எனத் தெரிவித்த அவர், மாகாண சபை தேர்தல் தோல்வியடைந்ததால் மக்கள்  எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை எனவும் கூறினார். இதேவேளை, 'ஜனாதிபதியும் பிரதமரும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர். அதன்போது மாகாண சபைகள் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க முடியும். 'எனவே, மாகாண சபை தேர்தல் குறித்து பீதியடைய வேண்டாமென அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகிறோம். 'மேலும்இ தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலுக்காக சுமார் 500 மில்லியன் ர...
Image
 ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 ரூபாயை தாண்டக்கூடும்..    ' சந்தையில் உருவாக்கப்பட்டிருக்கும் வர்த்தக மாஃபியா காரணமாக, பண்டிகை காலங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை  800 ரூபாயை தாண்டக்கூடும்' என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.   விலங்கு தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, உற்பத்தியாளர்கள் சாதாரண விலையில் இறைச்சி வழங்குவதிலிருந்து விலகுகிறார்கள் எனவும் சந்தையில் கோழி பற்றாக்குறையை உருவாக்க ஐந்து பெரிய தொழில் முனைவோர் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.   இந்நிலையில், வரும் பண்டிகை காலங்களில், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கு இறைச்சிக்கான பற்றாக்குறையை  பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.   தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சந்தை விலை 550-650 ரூபாய் வரையிலும், ஒரு முட்டையின் மொத்த விலை 12 ரூபாயாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image
 மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டும் கட்சிக்கு கிடைக்கும் இரு போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.   மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டும் கட்சியொன்றுக்குக் கிடைக்கும் இரு போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையை, புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும், அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார். அதன்படி, மாகாண சபைத் தேர்தலின் போது வெற்றி பெரும் கட்சிக்கு கிடைக்கும் இரு போனஸ் ஆசனங்கள், அந்த மாகாணத்துக்குரிய மாவட்டங்களுக்கு இரண்டு அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில், மூன்று மாவட்டங்களைக் கொண்ட மேல் மாகாணத்தில் வெற்றிபெரும் கட்சிகளுக்கு, இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 6 ஆசனங்கள் வழங்கப்படுமென்றும் கூறிய அவர், இதன்மூலம், நிலையான மாகாண சபையொன்றை நிர்மாணித்துக் கொள்ள முடியுமென்றார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில, இதுவரை தேர்தல் தொடர்பான உரிய திகதி குறி...
Image
 சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுப்பு. #நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனம்   (யாக்கூப் பஹா த்) இதற்கமைய முதலாவது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று 2021.03.30 அம்பாறை அம்/ஹேகொட சிறி இந்திரசார வித்தியாலயத்தில் இடம்பெற்றது அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து    இந்த  விழிப்புணர்வு கருத்தரங்கு வெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட செயலக உளநல சமுக  உத்தியோகத்தர்  யூ எல் அசார்த்தீன்,  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எஸ் ஜெகநாதன்,  சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்  தம்மிக்கா குலத்துங்க,   அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர்  ஐ எல் எம் . இர்பான், வெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் பொருளாளர் எஸ் ஏ பாஸித் அம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு ...
Image
 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முஸ்லிம் பெண்கள் விடயத்தை மாத்திரம் அக்கறை காட்டாமல் - ஏனைய பாதுகாப்பு சார் விடயங்களிலும் அக்கறை கொள்ள வேண்டும்   நேற்று பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரினால் சாரதி ஒருவர்  மிலேச்சத்தனமாக தாக்கப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  அலி ஸாஹிர் மௌலானா தனது கடுமையான அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.... நேற்று பட்ட பகலிலே ஒரு லாரி சாரதி மீது ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கியது போல, சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம் வழக்கறிஞரைத் தாக்கியது மற்றும் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆட்டிசம் நோயின் பாதிப்பிற்குள்ளான 14 வயது தாரிக் எனும் சிறுவனை இரக்கமின்றி அடிப்பது போன்றவை அனைத்தும் இலங்கையில் பொலிஸாரின் கொடூரமான செயற்பாடுகளின் போது பதிவான சம்பவங்களாகும் , இவ்வாறான எத்தனை சம்பவங்கள் பதிவு  செய்யப்படாமலே தவறியிருக்கும்? நாட்டின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் என கூறி முஸ்லீம் பெண்களை ஒடுக்க முயற்சிப்பதில் அதிக...
Image
 VIDEO : ஆசாத் ஸாலிஹ் பற்றிய உண்மைகள் ! போட்டுடைத்தார் மகள் ஆமினா ஸாலிஹ்   இதோ ஆசாத் ஸாலிஹ் பற்றிய உண்மைகள் ! போட்டுடைத்தார் மகள் ஆமினா ஸாலிஹ் உங்கள் தந்தை இன்னொருவரின் மனைவியை கூட்டிச் சென்றது நியாயமா ?  இம்முறை பன்சலைக்கு செல்ல வில்லையா ?  உங்கள் தந்தை ஆயிரம் வாக்குகள் கூட பெறாதவர் தானே ? http://sharevideo1.com/v/cmJ1U3YzTkQwbWc=?t=ytb&f=co
Image
 கிழக்கு மாகாண அண்ணாவிமார்களுக்கான செயலமர்வு - கல்குடா சார்பாக ஏ.எல்.ஏ.கபூர் பங்கேற்பு  கிழக்கு மாகாண பொல்லடி அண்ணாவிமார்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வும் அனுபவப்பகிர்வு நிகழ்வும் நேற்று 30.03.2021ம் திகதி செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. நவனீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல அண்ணாவிமார் கலந்து கொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  இச்செயலமர்வில் கல்குடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் வளர்ந்து வரும் இளம் தலைமுறை அண்ணாவியுமான ஏ.எல்.ஏ.கபூர் கலந்து கொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.  குறித்த நிகழ்வில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், மருவி வரும் இஸ்லாமிய பாரம்பரிய கலைகள் அழிந்து விடாமல் இதனை நான் பயில காரணமாக இருந்தவர் ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட மறைந்த அண்ணாவியார...
Image
 மின் துண்டிப்பு அறிவித்தல்   பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை (01) கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (03) கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தரவைக்கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், பீச் வீதி, இஸ்லாமாவாத் வீட்டுத்திட்டம், உடையார் வீதி, வீவீ வீதி, சாய்ந்தமருது பொலிவோரியன், கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும். திங்கட்கிழமை (05) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர், வௌவாலோடை ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்கிழமை (06) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவி...
  Video   பௌத்த மதகுரு சாராயம் குடித்துவிட்டு பொலிசாருடனும், மக்களுடனும் கலாட்டா செய்துள்ளார். இந்த சம்பவம் இன்று (30.03.2021)  காலி - ஜின்தோட்ட விகாரையில் நடைபெற்றுள்ளது.
Image
 கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரை தேடி கையளித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆர்.பி.டி.துமிந்த . # மட்டக்களப்பு     பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தரான ஆர்.பி.டி.துமிந்த என்ற பொலிஸ் உத்தியோகத்தரே மேற்படி பணப்பையைக் கண்டெடுத்தார். அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்து கொண்டிருந்தபோதே மாவடி முன்மாரி பகுதியில் வீதியில் கிடந்த பணப்பையைக் கண்டெடுத்துள்ளார். குறித்த பணப்பையில் 11300 ரூபாய் பணம், சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்டவை இருந்துள்ளன. குறித்த பணப்பைக்குச் சொந்தக்காரரான முனைக்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் கனிஸ்டன் உயர் வகுப்பு மாணவனிடம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க பணப்பையை ஒப்படைத்தார். பணப்பையைக் கண்டெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வாரமே மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...
Image
 ஆவ­ணங்­கள் சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விடின் பள்ளி நிர்வாகத்தை ஏற்கமாட்டோம் ஊர் மக்­களால் பள்­ளி­வா­ச­லுக்­காக நிர்­வா­கிகள் தெரிவு செய்­யப்­பட்­டாலும், அவர்கள் வக்பு சபையில் ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விட்டால், வக்பு சட்­டத்தின் படி நம்­பிக்­கையா­ளர்­க­ளாக ஏற்றுக் கொள்­ள­ப்படமாட்­டார்கள். வெறும் பரா­ம­ரிப்­பா­ளர்கள் என்ற நிலை­யிலே காணப்­ப­டு­வார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார். பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரி­விக்­கையில், பரா­ம­ரிப்­பா­ளர்கள் எந்த இடத்­திலும் பள்­ளி­வா­சலைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த முடி­யாது. இது போன்றே நம்­பிக்­கை­யாளர் நிய­மனம் பெற்று அது காலா­வ­தி­யான நிலை­யி­லுள்­ள­வர்­களும் நம்­பிக்­கை­யா­ளர்கள் என அழைக்­கப்­ப­ட­மாட்­டார்கள். அவர்கள் பொறுப்­பா­ளர்கள் என்றே அழைக்­கப்­ப­டு­வார்கள். வக்பு சபையில் சட்ட ரீதி­யாக நிய­மனம் பெறா­த­வர்கள் பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­தற்கு தகை­மையை இழந...
Image
 போலீஸ் உத்தியோஸ்தரால்  தாக்குதலுக்குள்ளான இளைஞர் யார்..?? சம்பவத்திற்கான காரணம் வெளியானது...!!! கொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. பொலிஸ் அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரிய வருகிறது. இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு வந்துள்ளார். மஹரகம நகர் வரும் போது இவரது கண் அசதியாக ஒரு கணம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவரது லொறி நிலை தடுமாறி பாதையை விட்டு விலகிய போது அங்கே வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொவிஸ் உத்தியோகஸ்தர் மீது லொறி கண்ணாடி மெதுவாக உரசி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கி இருக்கிறார். அந்நேரம் அங்கு நின்ற ஆட்டோ சாரதி உடனடியான லொறி சாரதியை தாக்க பின்னர் பொலிஸ் உத்தியோஸ்தர் தாக்கி இருக்கிறார். தற்போது தாக்கிய பொலிஸ் உத்தியோக...
Image
 அசாத் சாலியை விடுதலை செய்யவும் ; ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்.    குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   கொழும்பு, மட்டக்குளியில் நேற்று (28) இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த பகிரங்க வேண்டுகோளை விடுத்தார்.   அவர் மேலும் கூறியதாவது,   “அசாத் சாலியை விசாரணை செய்து, அவர் தவறிழைக்காவிட்டால் உடனடியாக விடுதலை செய்யுங்கள். சமூகத்துக்காக கருத்து தெரிவித்தார் என்பதற்காக, அவரின் குரல்வளையை நசுக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது தருமமும் நீதியும் அல்ல. சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்காக ஓயாது குரல் கொடுத்தவர். குறிப்பாக, ஜனாஸா அடக்கும் முயற்சிகளுக்கும் அவர் எங்களுடன் இணைந்து போராடினார்.   அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் ஆ...
Image
 தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ; கத்தோலிக்க திருச்சபை   தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை விருப்பம் தெரிவித்துள்ளது. நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டி கொழும்பு மறைமாவட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து குடிமக்களும் இதை அவசரமாக செயற்பட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பு மறைமாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த குற்றத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திட்டமிட்டவர்கள், நிதி உதவி, அரசியல் ஆதரவை வழங்கியவர்கள் என தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த தீவிர இஸ்லாமிய குழுக்கள் அனைத்தும் உடனடியாக தடை செய்ய்யப்படவேண்டும் என...
Image
 பொது மக்களின் அவல நிலையை. அறிந்த இரு தலைவர்கள் இன்று நாட்டின் தலைவர்களாகி விட்டனர் .   பொது மக்களின் அவல நிலையை அறிந்த இரு தலைவர்கள் இன்று நாட்டின் தலைவர்களாகி விட்டனர் என்றும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் எப்போதும் நாட்டையும் புத்தசாசனத்தையும் மனதில் கொண்டே முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 'இது ஒரு பௌத்த நாடு அல்ல' என்று கூச்சலிட்ட அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்றும் அன்று பிக்குமார்கள் சிறையிலடைத்து தண்டிக்கப்பட்டனர் என்றும் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இன்று சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசும் எதிர்க்கட்சி அப்போதைய அரசாங்கத்தில் தொல்பொருள் நிலையங்களை உடைத்து தரைமட்டமாக்கி வீடமைப்புக் கிராமங்களை அமைத்தது, தற்போதைய அரசாங்கம் மரங்களை வெட்டாமல் சுற்றுச்கூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் மக்களுக்காக வீடுகளைக் கட்டி வருகின்றது என்றும் அமைச்...
Image
 புத்தர் சிலை அமைக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.   பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டிக் கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.  அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினருக்கு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து அவர்கள் பின்வாங்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த.சுபோதரன் மக்களுடன் சமுகமளித்து, அங்குவந்த பிக்குமாரிடம் நியாயத்தை எடுத்துரைத்ததும் அவர்கள் ஏற்றுக்கொண்டு பின்வாங்கினர். இது தொடர்பில் உறுப்பினர் சுபோதரன் தெரிவிக்கையில், “பொத்துவில், முகுதுமகாவிகாரை பௌத்தபிக்கு தலைமையிலான குழுவினர் எமது மயானப்பகுதியில் புத்தர்சிலை அமைப்பதற்காக கொங்கிரீட் தூண் முதலான பொருட்களுடன் வந்திறங்கினர். இது விடயம் மக்களுக்குத் தெரியவரவே, அங்கு மக்கள் ஒன்றுகூடியமையால் நிலைமை பதட்டத்துக்குள்ளானது. “நானும் அங்குசென்று, அவர்களிடம் இது எமது பிரதேச மயானம். இதற்குள் புத்தர் சிலை அமைப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. எனவே, முயற்சியைகை வ...
Image
 சாரதியை தாக்கிய போலீஸ் அதிகாரி கைது.   பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து லொறி ஒன்றின் ஓட்டுனர் ஒருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
Image
 தமிழீழ விடுதலை புலிகளை ஊக்குவிக்கும் YouTube மற்றும் இணையதளம் நடத்திய குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் கைது.   எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு ஊக்குவிக்கும் வகையில் யூடியுப் அலைவரிசை மற்றும் இணையதளம் ஒன்றை முன்னெடுத்து சென்ற பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரில் இணையத்தளம் மற்றும் யூடீப் அலைவரிசை ஒன்றை நடத்திச் சென்ற இடம் அடையாளம் காணப்பட்டு அந்த இடம் இன்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன்போது, அந்த இடத்துக்கு பொறுப்பாக இருந்த 35 வயது பெண் ஒருவர் மற்றும் 36 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 05 கணினிகள் மற்றும் 05 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Image
 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’   சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணியின் கொழும்பு மாவட்ட  “இளைஞர் மாநாடு” முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட அங்கத்தவருமான பாயிஸின் ஏற்பாட்டில் மட்டக்குளியில் நேற்று (28) நடைபெற்ற போது, பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.   அவர் மேலும் கூறியதாவது,   அரசியல் இருப்பை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இனவாத சக்திகள் எங்களை மையமாக வைத்து, அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொண்டனர். சிறுபான்மை சக்திகளை ஒடுக்குவதும், அக்கட்சி...
Image
 அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழா  எஸ்.எம்.எம்.முர்ஷித் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பதவியுயர்வு பெற்ற உத்தியோகத்தர்களையும் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு கடந்த 27.03.2021ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன், ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மாணவிகளின் கண்கவர் நடனங்கள் இடம்பெற்றது. தொ...