Posts

Showing posts from April, 2022

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்தஇலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லை

Image
 தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்தஇலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லை. ஒரு நாடு நூறு சட்டங்கள். அதிலும் கிழக்கு வடக்கைப் பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிரம் சட்டங்கள். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாய அவர்களினால் நிறுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் நாங்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம். அவர் கொல்லப்பட்டு 17 வருடங்களின் பின்னராவது காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் அவரது கொலைக்கும், படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி பதாதைகள் வைக்கப்பட்டது. ஆனால் பொலிசாரினால் அண்மையில் அவை அகற்றப்பட்டிருந்தது.  கொ...

திரிபோஷ உற்பத்தி 3 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

Image
திரிபோஷ உற்பத்தி 3 மாதங்களுக்கு இடைநிறுத்தம் நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து லங்கா திரிபோஷ நிறுவனத்திடம் வினவியபோது, மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் போராட்டம் நியாயமானது, அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Image
 மக்களின் போராட்டம் நியாயமானது, அவர்களுக்கு வாழ்த்துக்கள் மக்களின் போராட்டம் நியாயமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எரிவாயு, எரிபொருள் என பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். காலி முகத் திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நியாயமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போராட்டத்தை முன்னெடுத்து வரும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். போராட்டத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை மே 23ம் திகதி,உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ம் திகதி,புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16ம்

Image
 சாதாரண தரப் பரீட்சை மே 23ம் திகதி,உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ம் திகதி,புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16ம் 2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை மே மாதம் 23ம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும்இ பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இம்முறை இந்தப் பரீட்சைக்கு நான்கு இலட்சத்து 5 ஆயிரத்து 123 பாடசாலை விண்ணப்பதாரிகளும்இ 1 இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் விண்ணப்பத்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 3 தவணைகளையும் உள்ளடக்கிய வகையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த வருடம் ஒக்டோபர் 16ம் திகதி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. ஒக்டோபர் 17ம் திகதியில் இருந்து நவம்பர் 12ம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள...

முடங்கிபோயுள்ள கொழும்பு

Image
 முடங்கிபோயுள்ள கொழும்பு

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Image
  அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களுவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று(வியாழக்கிழமை) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “களுவாஞ்சி பொலிஸாரினால் எனக்கு எதிராகவும், நான் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில், என் சார்ந்தவர்கள் யார் என தெரியவில்லை. இலங்கையில் வாழும் அனைவருமே நான் சார்ந்தவர்கள்தான். அவ்வாறு இருக்கும்போது, 14 நாட்களுக்கு எந்தவிதமான விடயங்களும் வீதியை மறித்தோ பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் ஒரு தடை உத்தரவு வழங்கியுள்ளனர். இதான் இன்று நாட்டில் அராஜகமான நிலை, ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வ...

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு

Image
  ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் சம்பவம் மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் !!

Image
#ஹட்டனில் சம்பவம்  மண்ணெண்ணெய் வரிசைக்காக 5 மணித்தியாலத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை  உயிரிழந்த சம்பவம் !! மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் ஹட்டனில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு  குறித்த நபர் 5  மணித்தியாலங்களுக்கும் மேலாக வரிசையில் நின்றுள்ளார்.  இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது...

அரசுக்கு ஆதரவளிக்க பல கோடிகளை முஷாரப் பெற்றுக் கொண்டார் : அரசியலில் அவரை " ஐஸ் கிரீம் பேபி" யாகவே பார்க்கிறோம் .

Image
 அரசுக்கு ஆதரவளிக்க பல கோடிகளை முஷாரப் பெற்றுக் கொண்டார் : அரசியலில் அவரை " ஐஸ் கிரீம் பேபி" யாகவே பார்க்கிறோம் . நூருல் ஹுதா உமர் 20ம் திருத்த வாக்கெடுப்பு இடம்பெற சில தினங்களுக்கு முன்னரே அந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஆயத்தங்களை இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம். முஷாரப் தனக்கு சாதகமான பிரதேச ஆதரவாளர்களை கொண்டு செய்ததை இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம். இப்போது பொய்யான கதைகளை கூறி தன்னை நல்லவராக அடையாளப்படுத்த முனைகிறார். சட்டமூலங்களை ஆதரிக்க 02 கோடி வாங்கியதும், துறைமுக சட்டமூலத்தை ஆதரிக்க 06 கோடி வாங்கியதும் எங்களுக்கு தெரியாமல் இல்லை. 20 க்கு ஆதரவளித்தவர்களில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை தவிர ஏனைய எல்லோரும் சலுகைகளை பெற்றுள்ளனர் என்று திடமாக கூறுகிறேன். தேவையேற்படின் ஆதாரங்களையும் முன் வைப்பேன். நாங்கள் சலுகைகளை வாங்கவில்லை என்று இவர்கள் சாத்தியமிட தயாரா என கல்முனை மாநகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான உறுப்பினர்களினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அகில...

பிரதமர் பதவி விலகக் கூடாது என பல பிரதேச சபை தவிசாளர்கள், மேயர்கள் தீர்மானம்

Image
 பிரதமர் பதவி விலகக் கூடாது என பல பிரதேச சபை தவிசாளர்கள், மேயர்கள் தீர்மானம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமருடன் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என பிரதமர் உடகப் பிரிவு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மாவட்டத் தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர். மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமர் என்றும் மக்களின் இறையாண்மைக்கு பிரதமர் தலைவணங்கினால் அவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிக்க வேண்டும் எனவும் பிரதேச சபைகளின் தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தெரிவித்தனர். அதற்கமைய மேற்படி தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தெரிவிக்கவும் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் மேயர்கள் தீர்மானித்தனர். மஹிந்த ராஜபக்ச என்ற பெயரையும்...

குறைந்த விலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கும் ரஷ்யா

Image
 குறைந்த விலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கும் ரஷ்யா தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யா வழங்குவதாக ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். எனவே, மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பமும் உறுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தால் மூன்று நாட்களில் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இடைக்கால தேசிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும், நிறக் கட்சிகளை ஒதுக்கி வைத்து மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயப்பட வேண்டாம்.. பதவி விலக மாட்டேன்..." பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸ

Image
 “பயப்பட வேண்டாம்.. பதவி விலக மாட்டேன்..." பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸ - அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். - பொருளாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் இல்லாதொழித்த நாட்டையே கடந்த அரசாங்கம் எமக்கு கையளித்தது. - தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். - சர்வதேச நாணய நிதியம் போன்றே நட்பு நாடுகளும் எங்களுக்கு உதவ தயாராக உள்ளன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.  இதற்குப் பதிலளித்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 'இல்லை, நான் பதவி விலக மாட்டேன்... பயப்படாதீர்கள்...' என கூறினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று (26) முற்பகல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்ததாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள...

சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை தோண்ட நடவடிக்கை.

Image
 சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை தோண்ட நடவடிக்கை. கல்முனை- சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க  வைத்து உயிரிழந்த உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரா என்ற புலஸ்தினி மஹேந்திரனின் மரபணுவை ஆராய்வதற்காகவே இவ்வாறு 2019ஆம் ஆண்டு சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் உடற்பாகங்கள் தோண்டப்படவுள்ளன.

அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் குறித்து ரஷ்யா எச்சரிக்கை

Image
 அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் குறித்து ரஷ்யா எச்சரிக்கை அணு ஆயுதப் போருக்கான கணிசமான அபாயங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இந்த அபாயத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாங்கள் அணு ஆயுதப் போரை தவிர்க்கவே விரும்புகிறோம். எனினும் உக்ரைன் கிழக்கில் நடைபெறும் போரில் மேற்கத்திய ஆயுதங்களின் குவிப்பு ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அணு ஆயுதப் போருக்கான ஆபத்துகள் கணிசமாக உள்ளன என நேற்று ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறினார். அணு ஆயுதப் போருக்கான அபாயங்கள் குறித்துப் பேசி தேவையின்றி அச்சத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ஆனால் ஆபத்து தீவிரமாக உள்ளது. நாம் அதை குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் செர்ஜி லாவ்ரோவ் சுட்டிக்காட்டினார். இதேவேளை, உக்ரைனை ஆதரிக்கும் உலக நாடுகளை மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டாக அணு ஆயுதப் போர் எச்சரிக்கையை தற்போது ரஷ்யா கையில் எடுத்துள்ளது. இது ரஷ்யாவின் தோல்வியை குறிக்கிறது என செர்ஜி லாவ்ரோவின் நேர்காணலுக்குப் பின்னர் இது குறித்துக் க...

மின் கட்டண அதிகரிப்பு விவகாரம்; மின்சக்தி அமைச்சர் விளக்கம்!

Image
 மின் கட்டண அதிகரிப்பு விவகாரம்; மின்சக்தி அமைச்சர் விளக்கம்! மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டண திருத்தங்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளிப்பதானது, முதல் தடவை அல்ல என்றும், கட்டண திருத்தங்களுக்கான கோரிக்கை 2015 முதல் பலமுறை முன்வைக்கப்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனை நடைமுறைப்படுத்தவோ, திருத்தவோ அல்லது பிரேரணையை நிராகரிக்கவோ அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய மின்சாரக் கட்டணத்தை திருத்தும் கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

தங்க சுவர்க்க விசா திட்டம்: விசா வழங்குவதில் புதிய பொறிமுறை - ஜனாதிபதியின் யோசனைக்கு அனுமதி

Image
 தங்க சுவர்க்க விசா திட்டம்: விசா வழங்குவதில் புதிய பொறிமுறை - ஜனாதிபதியின் யோசனைக்கு அனுமதி இலங்கையில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நீண்டகால வதிவிட விசா வழங்கும் பொறிமுறைக்குப் பதிலாக புதிய முறைமையொன்றுக்கு 2021 மார்ச் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொறிமுறையின் கீழ் குறிப்பிட்ட நீண்டகால வதிவிட விசா வழங்குதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்களுக்கு மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இயக்குநர்களுக்கு, அவர்களுடைய துணைவருக்கும் தங்கி வாழ்பவர்களுக்கும் அவ்வாறு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்ட கால வதிவிட விசா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வ...

அமெரிக்க தூதுவர் முகமாலை பகுதிக்கு விஜயம்; கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டார்!

Image
 அமெரிக்க தூதுவர் முகமாலை பகுதிக்கு விஜயம்; கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை பார்வையிட்டார்! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று (26) காலை முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார். டாஸ் நிறுவனத்தினால் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவருக்கு குறித்த மனிதநேய பணி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், கள ஆய்வினையும் மேற்கொண்டு அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள மனிதநேய கண்ணிவெடி அகற்றம் பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார். தொடர்ந்து குறித்த பகுதியில் அகற்றப்பட்ட ஆபத்தமிக்க வெடி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு தூதுவருக்கு விளக்கமளிக்...

ஜெர்மன் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட மூவர் கைது...

Image
 ஜெர்மன் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட மூவர் கைது... இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்படி துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஜெர்மன் யுவதி, மற்றொரு நபருடன் சுற்றுலா வந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், அவர்களின் கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதனையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர். அதற்கமைய கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும்- விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்து

Image
 ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும்- விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்து  ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உடனடியாக பதவியில் இருந்து விலகி இடைக்கால அரசாங்கமொன்றை நியமிக்க வேண்டுமென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விசேட வைத்தியர்கள் சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வருஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உடனடியாக பதவியில் இருந்து விலகி இடைக்கால அரசாங்கமொன்றை நியமிக்க வேண்டுமென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விசேட வைத்தியர்கள் சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.டாந்த பொதுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவே...

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனுரவும் ஆதரவு

Image
 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனுரவும் ஆதரவு 1) அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்குமாக இருந்தால், அதற்கு தேசிய மக்கள் சக்தியும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. 2) அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 3) ஏற்கனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் 40 சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி என்பன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களுடன் இணைந்து பாப்பரசர் விசேட பிரார்த்தனை

Image
  இலங்கையர்களுடன் இணைந்து பாப்பரசர் விசேட பிரார்த்தனை இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று விசேட பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளார். வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஆயர்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி காயமடைந்தவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் இன்று விசேட ஆராதனையை முன்னெடுக்கவுள்ளார் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். வத்திக்கானிற்கு சென்றுள்ளவர்கள் விசேட ஆராதனையின் பின்னர் பரிசுத்த பாப்பரசரை சந்திப்பார்கள் என கர்த்தினால் தெரிவித்துள்ளார். இது அரசியல் நிகழ்வில்லை. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் ஆராதனை மாத்திரமே. நாங்கள் அவர்களின் நிலைமையை உலகிற்கு காண்பிக்க விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். பலவிடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் உண்மையை அறிவதற்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நால்வர் கைது

Image
  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நால்வர் கைது நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் டி- 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வியாபாரி ஒருவர் கப்பம் கட்டாததால், அவரை படுகொலை செய்ய குழு ஒன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சுற்றவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், வெளிநாடு ஒன்றில் மறைந்திருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32/37/38 மற்றும் 42 வயதுடைய மினுவாங்கொடை மற்றும் கொட்டுகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தடைகள் அகற்றப்பட்டன….! போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை வந்தடைந்தனர்..!

Image
 தடைகள் அகற்றப்பட்டன….! போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை வந்தடைந்தனர்..!

சூடுபிடிக்கும் போராட்டக் களம்: பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும்

Image
 சூடுபிடிக்கும் போராட்டக் களம்: பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும்  இடையில் முரண்பாடு  கொழும்பின் முக்கிய வீதிகளில்  அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.  கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பொலிஸார் கொழும்பின் முக்கிய பல வீதிகளில் வீதித்தடைகளை அமைத்துள்ளனர்.  இதன் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும்,  காலி முகத்திடல் போராட்டக் களத்தை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து பேரணியாக சென்று கொண்டுள்ளனர்.  அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து  காலி முகத்திடலை நோக்கி  பேரணியாக செல்லும் வழியில்  லோட்டஸ் வீதிக்கருகே போடப்பட்டிருக்...