Posts

Showing posts from July, 2024

கனடா செல்லவிருந்த இளைஞன் சடலமாக மீட்பு ! 20 இலட்சம் பணத்துடன் சென்றபோது ஏற்பட்டுள்ள சம்பவம்

Image
  கனடா செல்லவிருந்த இளைஞன் சடலமாக மீட்பு ! 20 இலட்சம் பணத்துடன் சென்றபோது ஏற்பட்டுள்ள சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனொருவன் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் நேற்றுமுன்தினம் (29) பிற்பகல் ரூ.20 இலட்சம் பணத்துடன் யோகபுரத்திலிருந்து பாண்டியன் குளத்துக்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவருகின்றது. பின்னர் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து நண்பர்கள் தேடி பார்த்த போது அவனை காணவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கிள் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாவது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) சடலம் இனங்காணப்பட்டு பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய VFS விசா ஒப்பந்தத்திற்கு எதிராக TISL உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் !

Image
  சர்ச்சைக்குரிய VFS விசா ஒப்பந்தத்திற்கு எதிராக TISL உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் ! இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அனுமதி முறையை (ETA) கையாளுவதற்காக தனியார் நிறுவனங்களைக் ஒப்பந்தம் செய்யும் போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடைமுறை மீறல்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை (SC/FR/221/2024) நேற்று செவ்வாய்கிழமை (30) தாக்கல் செய்தது.  சுற்றுலாத் துறை, தேசியப் பொருளாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் முடிவெடுப்பது மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத் தன்மை இன்மை மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, பொது நலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14A ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமை பிரதிவாதிகளின் செயல...

தபால் மூல வாக்களிப்பு குறித்து பரவும் போலித் தகவல் : தெளிவுபடுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு !

Image
  தபால் மூல வாக்களிப்பு குறித்து பரவும் போலித் தகவல் : தெளிவுபடுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு ! on  Wednesday, July 31, 2024 By  kugen எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொதுமக்களின் இதர தேவைகளுக்காக, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவின்  www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க முடியும் என சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் தகவல்கள் போலியானதாகும். எனவே, தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  www.elections.gov.lk  என்ற இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவலின்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் தங்களத...

வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் பலி ! யார் இவர் ? எவ்வளவு முக்கியமானவர்?

Image
  வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் பலி ! யார் இவர் ? எவ்வளவு முக்கியமானவர்?   இரானின் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, அவரின் வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். வான்வழி தாக்குதல் மூலம் அவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் இயக்கம் உறுதி செய்துள்ளது. பாலத்தீனத்தின் பிரதமராகவும், ஹமாஸ் அமைப்பின் தலைவராகவும் பலரால் அறியப்பட்ட ஹனியே, அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகு காஸாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரானில் கொல்லப்பட்ட ஹனியே யார்? அவரின் அரசியல் வாழ்க்கையும் வளர்ச்சியும் எப்படி இருந்தது? அகதிகள் முகாமில் பிறந்த ஹனியே அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, 1963ம் ஆண்டு பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். 1980களின் பிற்பாதியில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான தலைவராக உருவெடுத்தார். 1989ம் ஆண்டு, இஸ்ரேலில் அவர் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பிறகு 1992ம் ஆண்டு இதர ஹமாஸ் தலைவர்களுடன் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் ...

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் விசேட அறிவிப்பு !

Image
  வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் விசேட அறிவிப்பு ! குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்தத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது. மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக புகையுடன் பயணித்த வாகனங்கள் கருப்பு பட்டியலில் இணைப்பு !

Image
  அதிக புகையுடன் பயணித்த வாகனங்கள் கருப்பு பட்டியலில் இணைப்பு ! சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த 93 வாகனங்கள் இந்த வருடத்தில் கருப்புப்பட்டியலில் இடப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கருப்புப் பட்டயலில் இடப்பட்டதாக அதன் பணிப்பாளர் தசன் கமகே தெரிவித்துள்ளார். சில வாகனங்கள் தீங்கு விளைவிக்கும் வகையில் புகையை வௌியேற்றினால் 070 3500 525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்புமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், பொது மக்களிடம் கோரியிருந்தது. "மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, அதிக புகையினை வெளியிடும் வாகனம் செல்கிறது என்றால் இடம், நேரம், திகதி மற்றும் வாகன எண் குறிப்பிடப்பட்டு புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்புமாறு கோரப்பட்டிருந்தது. பின்னர் அந்த வாகன உரிமையாளர்களை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அழைத்து அறுவுறுத்தப்படும். அதனையும் பொருட்படுத்தாவிடின் கற...

கைதியின் தாக்குதலில் சிறைச்சாலை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி !

Image
  கைதியின் தாக்குதலில் சிறைச்சாலை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி ! போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றுக்காகக் குறித்த சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார். உடுதும்பர பகுதியில் வைத்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உடுதும்பர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வௌியான தகவல் !

Image
  முச்சக்கரவண்டியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வௌியான தகவல் ! கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பொலிஸார் இன்று கண்டு பிடித்தனர். இன்று (23) அதிகாலை 1 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலின் படி, குருந்துவத்தை பொலிஸாரால் வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் நடத்திய சோதனையில் மித்தெனிய பிரதேசத்தில் வசிப்பவருக்கு குறித்த முச்சக்கரவண்டி சொந்தமானது என தெரியவந்துள்ளது. விசாரணையில், முச்சக்கரவண்டியை தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த கொடுத்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார். இதன்படி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார என தெரியவந்துள்ளது. பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வந்த அவர், இரவில் வாடகை முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருந்ததாக பொலிஸார் தெரி...

தங்க நகை அடகு வைத்த குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகை !

Image
  தங்க நகை அடகு வைத்த குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகை ! 2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மினிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 23. வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை வழங்குதல் கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்து பிரிவுகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதகமான தாக்கத்துக்கு உள்ளானார்கள். அதன் விளைவாக தங்க நகைகளை அடகு வைத்தல் வேகமாக அதிகரித்துள்ளது. 2019 ஆண்டில் ரூபா 210 பில்லியன் அளவில...
Image
  மட்டக்களப்பு தாந்தாமலை காட்டுப் பகுதியில் இருந்து 6 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு ! on  Tuesday, July 23, 2024 By  Shana மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை காட்டுப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (23ம் திகதி) மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 39ம் கிராமம், செல்வாபுரத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான செல்வநாயகம் லிங்கேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த ஞாயிறுக்கிழமை தனது வீட்டிலிருந்து தாத்தாமலை முருகன் ஆலயத்திற்கு போவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் ஆலயத்தை அண்டிய பகுதியில் அவரை தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கால்நடைகளை பராமாரிப்பதற்கு சென்ற ஒருவர் காட்டின் மலைப் பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தகவல் வழங்கியதன் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் பணிப்புரைக்கு அமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்றுப...

சிறுமியை பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் செய்த பூசாரி கைது !

Image
  சிறுமியை பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் செய்த பூசாரி கைது ! பதினான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.  லுணுகலை ஹொப்டனைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  தனது மகளுக்கு அளவுக்கதிகமான கோபம் வருவதாகவும் வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை பிள்ளை கேட்பதில்லை எனவும் பல காரணங்களினால் தெய்வ குற்றமாக இருக்கலாம் என எண்ணி பிள்ளைக்கு தாயத்து கட்டுவதற்காக பூசாரி ஒருவரை அணுகியுளள்னர். இதன்போது கடந்த மாதம் 3ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த பூசாரி பிள்ளைக்கு தாயத்து கட்ட வேண்டும் என கூறி அனைவரையும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.  அதன்பின்னர் இந்த பூசாரி தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது. பின்னர் சுகயீனமுற்ற சிறுமியை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முற்பட்ட போது சிறுமி கருதரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் 7ஆம் மாதம் 11 ம் திகதி லுணுகலை பொல...

சிங்களவர், தமிழர், முஸ்லீம் என பிரிந்துவிடாமல் இலங்கையராக நாட்டை முன்னேற்ற முடியும் : அமைச்சர் மனுஷ நாணயக்கார !

Image
  சிங்களவர், தமிழர், முஸ்லீம் என பிரிந்துவிடாமல் இலங்கையராக நாட்டை முன்னேற்ற முடியும் : அமைச்சர் மனுஷ நாணயக்கார ! போராட்டத்தின் மூலம் வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினால் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் . போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் தமது சேவையிலிருந்து தாமாக விலகிக்கொண்டதாக கருதப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படும் என முதல் ஆயிரம் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டதை அறிந்த புகையிரத தொழிற்சங்க உறுப்பினர்கள் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் . இவர்களின் போராட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்பே பயணி ஒருவரின் உயிர் பறிபோய்விட்டது இது கவலைக்குரிய விடயமாகும்  "தனது தொழிலை தாமே கைவிட்டதாக கருதப்பட்டு வேலை நீக்கம் செய்யப்படும் என ஊழியர்களுக்கு கடத்தும் சென்றதாகும் ௧௯௮௦ ஜூலை மதத்தினை மக்கள் மீண்டும் 2024 ஜூலையில் நினைவில் கொள்ள ஆரம்பித்துள்ளனர் . கொடுப்பனவுக்காக வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட சில தொழிற்சங்கங்கள் தங்கள் உயிர...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்களுக்கு சேவை நீக்க கடிதம் அனுப்பப்பட்டது !

Image
  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்களுக்கு சேவை நீக்க கடிதம் அனுப்பப்பட்டது ! பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை கோட்டாபய ராஜபக்‌ஷ பார்த்துக் கொண்டிருப்பார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகித்துக் கொள்ளமாட்டார் என்றும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார். கடுமையான தீர்மானங்களை எடுக்காவிடின் இவர்களை கட்டுப்படுத்த முடியாதெனவும் மக்களை பணயக் கைதிகளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு அடிப்பணிய முடியாதெனவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை !

Image
  மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை ! கடந்த 2006 ஆம் ஆண்டில் பெலியத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  தங்காலை மேல் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்கவினால் இன்று (10) இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் குமார என்ற 41 வயதுடைய நபரொருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரணசிங்க ஆராச்சிகே தினுஷா லக்மாலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த பெண் பயணியொருவர் நடுவானில் மரணம் : கராச்சி விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கம் !

Image
  இலங்கையை சேர்ந்த பெண் பயணியொருவர் நடுவானில் மரணம் : கராச்சி விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கம் ! இலங்கையைச் சேர்ந்த பெண்பயணியொருவர் நடுவானில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பயணிகள் விமானமொன்று அவசர அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்திலிருந்த குறிப்பிட்ட பெண்பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகவும் இதனை தொடர்ந்து விமானி கராச்சி விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான வேண்டுகோளை விடுத்தார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பாகிஸ்தானின் சிவில்விமான போக்குவரத்து அதிகாரசபையை சேர்ந்தவர்கள் மருத்துவபரிசோதனைக்காக விமானத்திற்குள் ஏறியுள்ளனர். அவர்கள் சிகிச்சையளித்த போதிலும் இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் விமானநிலையத்தின் மருத்துவ அதிகாரி குறிப்பிட்ட பெண்ணிற்கு மரணசான்றிதழை வழங்கியுள்ளார். இதனை தொடர...

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில் 728 பேர் கைது !

Image
  யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில் 728 பேர் கைது ! நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 718 ஆண்களும் 10 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 34 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 81 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  சந்தேக நபர்களிடமிருந்து 147 கிராம் 507 மில்லிகிராம் ஹெரோயின், 246 கிராம் 261 மில்லிகிராம் ஐஸ், 29,709 கிராம் 06 மில்லிகிராம் கஞ்சா, 5,204 கஞ்சா செடிகள் மற்றும் 134 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களின் வேதனத்தை உயர்த்தினால் வரி அதிகரிக்கும் !

Image
  அரச ஊழியர்களின் வேதனத்தை உயர்த்தினால் வரி அதிகரிக்கும் ! தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் வேதன உயர்வை வழங்கினால், தற்போதுள்ள வற் வரியை உயர்த்த நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.தற்போதுள்ள 18% வற் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும், பொதுமக்களை நசுக்கி அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டுகளுக்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகம் !

Image
  ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டுகளுக்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகம் ! ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் அதிவேகவீதிகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார். இந்த இலத்திரனியல் விநியோகமுறை இவ்வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை : கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுடெடுப்பு !

Image
  சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை : கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுடெடுப்பு ! பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பூஸா சிறைச்சாலையின் வைத்தியசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று (7) விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுவர் மற்றும் தலையணைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது !

Image
  கையடக்கத் தொலைபேசிகள், மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திருட்டு : தாயும் மகளும் கைது ! மாத்தளை பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் தாயும் மகளும் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (7) மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யும் கடையொன்றிற்குள் சென்று திருட முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

Image
  மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு ! மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதது, குருக்கள்மடம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,நீதிமன்ற உத்தரவைப் பெற்று சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதோடு, சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Image
  அஞ்சல் ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்தம் ! on  Sunday, July 07, 2024 By  Shana அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏனைய அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிந்தக பண்டார குறிப்பிட்டார். மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

இந்த வருடம் சம்பள அதிகரிப்பு இல்லை – ஜனாதிபதி !

Image
  இந்த வருடம் சம்பள அதிகரிப்பு இல்லை – ஜனாதிபதி ! அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் (06) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது !

Image
  அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது ! மாரவில பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது மிகவும் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வலம்புரி சங்கு, 01 கிலோ 105 கிராம் எடையுடையதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்து ஆதரவு : பசில் ராஜபக்ச !

Image
  ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்து ஆதரவு : பசில் ராஜபக்ச ! நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயற்படும் போதெல்லாம், எவ்வித பயமுமின்றியே ஜனாதிபதிக்கு உதவி செய்தோம். அதேபோன்று எங்களுக்கு அச்சமும் இல்லை, கடனும் இல்லை என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறுகிறோம். எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் அந்த நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிடம் உள்ளது என்று முடிவு செய்தோம், நாங்கள் இன்று வரை அந்த ஆதரவை வழங்குகின்றோம். எதிர்காலத்திலும் வழங்குவோம். இந்த நாட்டுக்காகவும், இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்” என்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது !

Image
  வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது ! சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 3 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தின் நுழைவாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலிகை விதைகளை உட்கொண்டு மாணவர்கள் மயக்கம் : 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

Image
  மூலிகை விதைகளை உட்கொண்டு மாணவர்கள் மயக்கம் : 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி ! பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை மாணவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த பாடசாலை சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தி யதையடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டுவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை உட்கொண்டதையடுத்து 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். பின்னர் அவர்களை உடனடியாக எம்புலனஸ் வண...