"பரண் இரவு | Paran Night" பிரதேச கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

"பரண் இரவு | Paran Night" பிரதேச கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது ________________________________________________ இறக்காமம் கலாச்சார அதிகார சபையின் கலைஞர்கள் ஒன்றுகூடல் "பரண் இரவு | Paran Night" நிகழ்வானது சிரேஷ்ட கலைஞர்களின் பங்கேற்புடன் பல்வேறுபட்ட கலைப் படைப்புக்களுடன் 2022.03.29 ஆம் திகதி செவ்வாய் கிழமை மாலை 7.00 மணி தொடக்கம் முழு இரவு நிகழ்ச்சியாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக கலாச்சார அதிகார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். இப்றாலெப்பை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக இறக்காமத்தின் சிரேஷ்ட கலைஞர்களான கெபிடல் FM சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல். ஜபீர் இற-மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஜௌபர், இற- GMMS வித்தியாலய அதிபர் ஏ.ஹாறுடீன், கிராம சேவை உத்தியோகத்தர்களான பீ.எம். அஸீஸ், யூ.எல். யாசின்பாவா, யூ....