மனிதாபிமானமற்ற செயல்..' தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்தி
மனிதாபிமானமற்ற செயல்..' தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி தெளிப்பு.. ஐகோர்ட் அதிருப்தி இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வது தொடர் கதையாகியுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் முறையாக ஒப்புகை சீட்டு பெற்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, 42 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து. அவர்களது விசைப் படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை கிருமிநாசினி தெளிப்பு. இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் மேலும் 25க்கும் மேற்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. வெறும் சில மணி நேரத்தில் மொத்தம் 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது ச...