Posts

Showing posts from September, 2021

ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கை தொடர்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் ; Police

Image
 ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கை தொடர்பில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் ; Police   சமீபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் வாக்குமூலம்  பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரின் இந்த நடைமுறையானது சாதாரண நடைமுறை அல்லவென குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஊடக நிறுவனங்கள் பெரிதும் பங்களிப்பு வழங்குவதன் காரணமாக, ஊடகவியலாளர்களை பொதுவாக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கும் நடைமுறை இல்லையெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரின் இந்த செயற்பாடு காரணமாக தற்போது மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொழில்முறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள

சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.

Image
 சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.   (இராஜதுரை ஹஷான்) சுகாதார பாதுகாப்பினை பின்பற்றாத பேருந்து  சாரதிகள் மற்றும் நடத்துனருக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும், சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு ஊரடங்கு தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படவுள்ள நிலையில் பொது போக்குவரத்து சேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு தழுவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை தளர்த்தப்பட்டவுள்ளது. இந் நிலையில் நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் கொவிட் தாக்கத்தை வெற்றிக் கொள்ள முடியும். பொது போக்குவரத்து சேவையை வழமை போன்று ஆரம்பித்தால் மீண்டும் கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமடைவதற்கான சாத்தியம் உள்ளது என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தால், அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்

Image
 ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தால், அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்   ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல்களை  முன்னெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பீ கூறியிருந்த நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க ஆளில்லா விமானங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அனைத்து சர்வதேச உரிமைகள், சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீதான உறுதிபாட்டை அமெரிக்கா மீறுவதை சமீபத்தில் பார்த்தோம். இந்த மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மோசமான எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என கூறினார். நண்பர்களுடன் பகிரவும்:

தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டிற்கு ஒரு துரதிர்ஷ்டவசமான விதியை ஏற்படுத்தியுள்ளது. | Sajith Premadasa

Image
 தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டிற்கு ஒரு துரதிர்ஷ்டவசமான விதியை ஏற்படுத்தியுள்ளது. | Sajith Premadasa   பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைத்து உண்மையான பிரச்சினைகளை மறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை வரவழைக்கும் அரசாங்கம் அத்தகைய பொது பிரதிநிதிகளை சி.ஐ.டி.க்கு அழைப்பதில் ஆச்சரியமில்லை என்று அவர் கூறினார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் தரவுகள் காணாமல்போன விடயம் தொடர்பில் அறிக்கை பதிவுசெய்வதற்காக சி.‍ஐ.டி.யில் ஆஜராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக மனுஷ நாணயக்கார இன்று காலை சி.ஐ.டி.யில் ஆஜராகும்வேளையில் அவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சி.ஐ.டி.க்கு சென்றிருந்தனர். இதன்போதே ஊ

இன குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன | mujibur Rahman

Image
 இன குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன | mujibur Rahman   (எம்.எஸ்.எம்.ஸாகிர்) இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பலத்த அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரீஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பியதையிட்டு ஊடக அமைச்சர் டளஸ் அழகப் பெருமவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே முஜிபுர் ரஹ்மான் தனது பலத்த அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். 'இலங்கை முஸ்லிம்கள் நடமாடும் குண்டுதாரிகள்' எனக் குறிப்பிட்டு, ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்ற கருத்து சிங்கள மக்களிடையே முஸ்லிம்களைப் பற்றிய தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த முடியும் என்று முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஊடக கலாச்சாரத்தை மீறி அரச ஊடகங்களில் இவ்வாறு இன குரோதத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், இதற்கு முன்பு ஒரு பேராசிரியருடைய நிகழ்ச்சியில் அப்பேராசி

காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க பட்டது .

Image
 காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க பட்டது .   காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அவை காலாவதியான திகதியிலிருந்து மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2021 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படவுள்ளதாக என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கை...

Image
 சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கை...   சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை, பொது இடங்களில் புகைத்தல் மற்றும் பல பிரச்சினைகள் குறித்த கடுமையான விடயதானங்களை புதிய கொள்கையில் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினருடன் சுகாதார அமைச்சில் இன்று (29) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்தா

மதுபான உபசாரமின்றி திருமண வைபவங்களை நடாத்த அனுமதிக்கும் வகையிலான புதிய வழிகாட்டால் தயாராகிறது.

Image
 மதுபான உபசாரமின்றி திருமண வைபவங்களை நடாத்த அனுமதிக்கும் வகையிலான புதிய வழிகாட்டால் தயாராகிறது.   சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம்  மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.   அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. நிலவும் கொவிட் தொற்று பரவல் நிலை காரணமாகக் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கத்தினால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, தற்போதைய சட்டக்கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண வைபவங்களை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. கொவிட் சுகாதார வழிகாட்டலின் கீழ், அனுமதி வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச எண்ணிக்கையிலான விருந்தினர்களைக் கொண்டு திருமண வைபவங்களை நடத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, நடத்தப்படவுள்ள திருமண வைபவ

இன்று அதிகாலை யானை தாக்கியதில் மீராவோடை ஹாஜியார் வீதியைச் சேர்ந்த முஹம்மது காசிம் என்பவர் உயிர் இழந்தார்.

Image
 இன்று அதிகாலை யானை தாக்கியதில் மீராவோடை ஹாஜியார் வீதியைச் சேர்ந்த முஹம்மது காசிம் என்பவர் உயிர் இழந்தார். #இன்னாலில்லாஹி #வ #இன்னா #இலைஹி #ராஜிஊன். அன்னார். ஓட்டமாவடி பிரதேச சபையில் எலெக்ட்ரிசியன் ஆக பணி புரியும் #ஐமீல் மற்றும்  மன்பவுல் ஹுதா அரபுக் கல்லூரி மார்க்கக் கல்வி கற்ற #சத்தார் மௌலவி. #இப்னு இவர்களுடைய மச்சானும் ஆவார். விவசாய செய்கையை மேற்கொள்வதற்கு வெள்ளாம சேனை என்றழைக்கப்படும் கார முனை அண்மித்த வயல் பகுதியில் விவசாய நிலம் பண்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வந்த போது இரவு நேர ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த  வரை இன்று இரவு அதிகாலை யானை தாக்கியதில் உயிர் இழந்த நிலையில் அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற தமிழ் இன குடும்பத்தினரால் காலை 09 மணி அளவில் அடையாளம் காணப்பட்டு பிரதேச சபை உத்தியோகத்தர் அக்பர் அவர்களுக்கு  மேற்கொண்ட  அழைப்பின் போது இந்த மரண விடயம் தெரியவந்தது பிரதேச சபைத் தவிசாளர் குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தவிசாளரின் வேண்டுகோளுக்கிணங்க அனர்த்தம் ஏற்பட்ட இடத்துக்குச் சென்று அங்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்...

இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கு வழங்குவோம்.

Image
இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கு வழங்குவோம்.   (ஆர்.யசி) கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும், நாட்டில் டொலர்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையிலும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும் வியாபார மாபியாகாரர்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் விதமாக விலையேற்றங்களை செய்வதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நெல் ஆளை உரிமையாளர்கள் அதிகூடிய விலையில் அரிசியை சந்தைக்கு வழங்கினாலும், அரசாங்கம் இறக்குமதி செய்யும் அரிசியை 95 ரூபாவுக்கே வழங்குவோம். அப்போது அரிசி உரிமையாளர்கள் என்ன செய்கின்றனர் என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் கூறினார். நுகர்வோர் அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருந்து அரிசி நிர்ணய விலை வியாபாரிகளின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில், இதுவரை காலமாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இப்போது அரசாங்கம் பின்வாகியுள்ளதற்கான காரணம் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் வினவிய போது அவர் மேற்கண்டவாறு

ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்

Image
 ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்   நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் : இதனை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

17 வயதுடைய சிறுமியை இரண்டு மாதங்களாக துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல் ; மூதூர் நீதிமன்ற நீதிவான் உத்தரவு

Image
 17 வயதுடைய சிறுமியை இரண்டு மாதங்களாக துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல் ; மூதூர் நீதிமன்ற நீதிவான் உத்தரவு   திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் 17 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை அடுத்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று (29) உத்தரவிட்டார். முட்டுச்சேனை, மாவடிச்சேனை, வெருகல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரை இரண்டு மாதங்களாக காதலித்து அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட் படுத்தியதாக தெரிவித்து சந்தேக நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனாவிலிருந்து இயற்கை உரம் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.

Image
சீனாவிலிருந்து இயற்கை உரம் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது.   சீன நிறுவனத்திடமிருந்து இயற்கை உரங்கள் இறக்குமதி  செய்வதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று அறிவித்தார். உரங்களின் மாதிரிகள் மீதான சோதனைகள் தீங்கு விளைவிக்கும் பாக்றீரியாக்களை கண்டறிந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இயற்கை உரங்களை வழங்க சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும். மேலும் தீங்கு விளைவிக்கும் பாக்றீரியாவுடன் கூடிய இயற்கை உரத்தை மீண்டும் நாட்டிற்குள் நுழைய விவசாயத் துறை அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத் திட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியா... ஆராயுமாறு அதிகாரிகள் கோரிக்கை.

Image
மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத் திட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியா... ஆராயுமாறு அதிகாரிகள் கோரிக்கை.   மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமப்படுத்தப்பட்டதா? கடந்த அரசாங்கத்தில் நடந்த முறைகேடுகளை ஆராயுமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலை அமைச்சில் இன்று (29.09.2021) நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கடந்த நல்லாட்சியில் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல ஒப்பந்தங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதா என்பதை ஆராயுமாறு மேற்படி அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர். கடவத்தை முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டம் மற்றும் மீரிகமவில் இரு

தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவும் செய்தி தொடர்பில்...

Image
 தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவும் செய்தி தொடர்பில்... தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ , உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல. அடிப்படையற்ற தகவல்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

யானை மற்றும் மனித மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

Image
 யானை மற்றும் மனித மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.   பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட  காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார் . இதற்கமைய அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்க உடனடி நடவடிக்கை தொடர்பில் மகாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாம் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை(28) மாலை உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது . இதன் போது என் கொல்லப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, நாளை முதல் அனைத்து மின்சார யானை வேலிகளிலும் இரவு நேர ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.. மேலும் மின்சார யானை வேலியின் 01 கி. மீ. தொலைவில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்படும், இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 04 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதற்கென 5000 புதிய பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெர...

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 விடுவிக்கப்பட்டன.

Image
 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 விடுவிக்கப்பட்டன.   கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய  பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன. எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கமைய, கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை உறுதியளித்ததை போன்று அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை மத்திய வங்கி வழங்கினால், அதனை முழுமையாக ஒரு வாரத்திற்குள் விடுவிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

Image
இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.   மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர் இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக  ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக (27) மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளையெல்லாம் தொடர்ந்து தங்களுடைய (இந்தியா) கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு இந்த நாடுகளுடைய விடையங்களில் எல்லை மீறி தலையிட்டுக் கொண்டு வருகிறார்கள் எனும் குற்றசாட்டு உலக அரங்கில் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் மட்டுமே... பால்மா, சீமெந்து, கோதுமை மா, கேஸ் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

Image
 அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் மட்டுமே... பால்மா, சீமெந்து, கோதுமை மா, கேஸ் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.   பால்மா, சீமெந்து, கோதுமை மா மற்றும் எரிவாயு சிலிண்டர்களின்  விலைகளில் மாற்றம் குறித்து எந்த முடிவும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அது மாத்தரமின்றி மொத்த மற்றும் சில்லறை விற்பனை ஆகிய இரண்டிற்கும் அரிசி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை அமைச்சரவை நீக்கியுள்ளது. இதனால் அரிசிக்கு அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது இருக்க 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். வாராந்திர அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்...

ஆத்மார்த்த அனுபவத்தைப் பருக வாருங்கள்.

Image
 இலங்கையின் அழகை ரசிக்கும் ஆத்மார்த்த அனுபவத்தைப் பருக வாருங்கள்.   இலங்கையின் அழகை ரசிக்கும் ஆத்மார்த்த அனுபவத்தைப் பருக உலக சுற்றுலாப்பயணிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதோடு, உலக சுற்றுலாப்பயணிகளின் கவனம் இலங்கையை நோக்கி தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். உலக சுற்றுலா தினமான நேற்று (27) ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்திருந்ததோடு, பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை, இலங்கையானது - வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த காலநிலைகளைக் கொண்டதான சுற்றுலாத் தீவாக இருந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுலாத்துறையானது, நாட்டுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குவதன் மூலம் பெரும் அந்நியச் செலவாணியை வாரி வழங்குகினாலும், கொவிட்- 19 தொற்று காரணமாக அது பாரியளவில் இப்போது செயற்படாமல் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். எனினும், உலகில் பல நாடுகள் பயணங்களுக்கான அனுமதியை வழங்கி வரும் இவ்வேளையில், உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனம் இலங்கையை நோக்கி தற்போது அதிகரித்துள்ளது. எனவே, இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்த்தெடுப்பதற்காக அரசாங்கம் தனிமைப்படுத்தல்...

வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Image
 வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது இன்று 2021-09-27ம் திகதி 11.30 மணியளவில் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து 26, 44 வயதுடைய இருவர் ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாழைச்சேனை மற்றும் வத்தளைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 44 வயதுடைய நபர் கொழும்பு பிரதேசத்திலிருந்து முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்து பிறைந்துரைச்சேனை பிரதேச வியாபாரிக்கு கொடுக்க முற்றப்பட்ட போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதோடு முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக எங்களுடன் இணையுங்கள்.

Image
 நாட்டை கட்டியெழுப்புவதற்காக எங்களுடன் இணையுங்கள்.   ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலம் என்பது நாட்டின் எதிர்காலம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவதற்காக, நெறிமுறை சிந்தனைக்குள் சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான பிரச்சினைகளை ஆராய்ந்து எங்களால் உருவாக்கப்பட்ட கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தின் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார். முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 62ஆவது சிரார்த்த தினம் நேற்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. அந் நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், எனவே, நாட்டை கட்டியெழுப்புவதற்காக தம்முடன் இணையுமாறு, பண்டாரநாயக்கவின் சமாதியிலிருந்து சகல மக்களுக்கும் அழைப்பு விடுத்தார். இன்று நாடும் மாறிவிட்டது. உலகமும் மாறிவிட்டது. பண்டாநாயக்கவின் முற்போக்கான கொள்கை வேலைத்திட்டம் என்பன இன்றைய யுகத்துக்கு ஏற்றதைப் போல அன்றே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய பொருளாதார கொள்கைகள், ...

ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

Image
 ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.   எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, ஒவ்வொரு துறையினரும் தமக்கான திட்டங்களை தற்போது தயாரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் விதம் குறித்த கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரோன் கெமராவை பறக்க விட்ட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலை..

Image
  ட்ரோன் கெமராவை வானில் பறக்கச் செய்த இருவர் நேற்று (27) மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொட மணல் பூங்காவில் குறித்த சந்தேக நபர்கள் ட்ரோன் கெமராவை பறக்க விடப்பட்டுள்ளனர். மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த ட்ரோன் கெமரா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நபர்களை கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

காதி நீதிமன்றத்தில் மாற்றங்களோ அடிப்படையிலான சட்டத்தில் மாற்றங்களோ வரப்போவதில்லை.

Image
 காதி நீதிமன்றத்தில் மாற்றங்களோ அடிப்படையிலான சட்டத்தில் மாற்றங்களோ வரப்போவதில்லை.   காதி நீதிமன்றத்தில் மாற்றங்களோ அடிப்படையிலான சட்டத்தில்  மாற்றங்களோ வரப்போவதில்லை காதி நீதிமன்றத்தில் பாரிய மாற்றங்களோ அடிப்படையிலான சட்டத்தில் மாற்றங்களோ வரப்போவதில்லை. மாறாக காதி நீதிமன்றங்களில் விசாரணையின் போது அநீதி இழைக்கப்படும் என்ற சந்தேக உணர்வு தோன்றும் பட்சத்தில் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய முஸ்லிம் விவாக விவாரகத்துச் சட்டத்தில் இயலாத ஒன்றைப் பெற்றுக் கொடுக்கவே முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்று யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினரும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் இணைப்புச் செயலாளருமான வசீர் முக்தார் தினகரனுக்கு வழங்கிய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். கேள்வி: முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் குறித்து இலங்கையில் சமீபகாலமாக சூடான களநிலவரம் காணப்படுகிறது. இது தொடர்பில் நீங்கள் கூறும் கருத்து? பதில்: குர்ஆன், சுன்னா அடிப்படையில் தான் உலக முஸ்லிம்களுடைய வாழ்க்கை முறை இருக்க...

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குள அபிவிருத்தி திட்டங்களில் பிரச்சினைகள், முறைப்பாடுகள் ; திருகோணமலையில் இராஜாங்க அமைச்சர்

Image
 கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குள அபிவிருத்தி திட்டங்களில் பிரச்சினைகள், முறைப்பாடுகள் ; திருகோணமலையில் இராஜாங்க அமைச்சர்   ஹஸ்பர் ஏ ஹலீம்_ கொவிட் வைரசிற்கு மத்தியில் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் ஏனைய மாவட்டங்களின் முன்னேற்றத்தை விட மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளதாகவும் அதற்காக அர்ப்பணித்து சேவையாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நேற்று (26) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போது கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நீர்ப்பாசனத் செழுமை அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கிராமிய குள நிர்மாண வேலைகளின் போது கிராமத்தில் இருக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் இயந்திர சாதனங்கள் தொழிலாளர்களை பெற்றுக் கொள்வதன் மூலமாக அக்கிராம மக்கள் பொருளாதார ரீதியாக பல பலன்களை ...

சீனாவிலிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் முதலீடு..

Image
 சீனாவிலிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் முதலீடு..   ரொபட் அன்டனி  சீனா,  இலங்கையில் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான  பெறுமதியான முதலீடுகளை விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றது. இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. விரைவில் இந்த வேலைத்திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரில் 530 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டு திட்டம், அம்பாந்தோட்டையில் சைனோபார்ம் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, பாதுகாப்பு கண்ணாடித் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மேலும் இலங்கையின் பாடசாலைகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்ற டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை முன்னெடுப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது. அதேபோன்று நவீன தொழில்நுட்ப விவசாய பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கும் நாரஹேன்பிட்டியில் ஒரு தொடர் மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது என்றும் பாலித கோஹண சுட்டிக்காட்டினார்...

கொவிட்19 சூழ்நிலையில் எமது சிறார்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையிலும் மிகவும் கடினமான ஒரு சவாலை வெற்றிகொண்டுள்ளனர்.

Image
 கொவிட்19 சூழ்நிலையில் எமது சிறார்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையிலும் மிகவும் கடினமான ஒரு சவாலை வெற்றிகொண்டுள்ளனர்.   இம்முறை GCE சாதாரன தர பரீட்சை முடிவுகள் வெளிவந்துவிட்டது...!!!  எனக்கு தெரிந்தவர்கள் பலரும் சிறந்த பெறுபேருகளை பெற்றுள்ளார்கள் , அவர்களது அடைவுகளின் விடயத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போதைய கொவிட்19 சூழ்நிலை காரணமாக பாடசாலைகளுக்கோ, பிரத்தியேக வகுப்புகளுக்கோ செல்ல முடியாத நிலையில் சவால்களை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். மிகவும் கடினமான ஒரு சவாலை வெற்றிகொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!!!   நாட்டின் அனைத்து சிறார்களும் அந்த சவாலை நன்றாக எதிர்கொண்டுள்ளனர் என்பதனை வெளியிடப்பட்ட முடிவுகளிலிருந்து காணலாம். நிகழ்நிலை (Online) கல்விக்குத் தேவையான சரியான வசதிகள் இல்லாமல் பல சகோதர சகோதரிகள் இந்த தடையை மிகச் சிரமத்துடன் கடந்து வந்துள்ளனர். அந்த மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர்கள் சங்கம் என்று எல்லோரும் தங்கள் வெற்றியைப் பற்றி மிகவும் பெருமைப்...

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதியின் விஷேட வேலைத்திட்டம் - 2022"

Image
 "பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதியின் விஷேட வேலைத்திட்டம் - 2022"   ஏ.பி.எம்.அஸ்ஹர் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை  பிரகடனத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் தேசிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதியின் "பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் - 2022" தொடர்பான முன்மொழிவுகளை தெளிவுபடுத்தி ஆரம்பித்துவைக்கும் விஷேட கூட்டம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஷ்ஷான் தலைமையில் இன்று சனிக் கிழமை பிற்பகல் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.  பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசானாயக்க கலந்து கொண்டார். புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் - 2022 இன் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி சூழல் மற்றும் பேன்தகு அபிவிருத்தி சமூக நலனோம்புகை மற்றும்...

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு.

Image
 கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு.   நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக  குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணமாகும். எதிர்வரும் வாரங்களில் இந்த மரண வீதம் மேலும் குறைவடையும் என அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் உள்ளவர்களில் 64 சதவீதமானோர் ஒரு தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டுள்ளனர். 52 சதவீதமானோர் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். 20 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளை கேட்டுள்ளார். 30 வயதிற்கும், 20 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 41 சதவீதமானோருக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன

வங்காள விரிகுடாவில் “குலாப்” (‘Gulab’) சூறாவளி

Image
 வங்காள விரிகுடாவில் “குலாப்” (‘Gulab’) சூறாவளி   வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்”  (‘Gulab’) என்ற சூறாவளியானது வட அகலாங்கு 18.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது மேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று (26 ஆம் திகதி) மாலையளவில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் - தென் ஒடிசா கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N - 20.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை: மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் பலத்தமழைவீழ்ச...

ஓக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு ..

Image
 ஓக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு ..   தற்போதைய முடக்கல் நிலை ஓக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக சம்மேளன கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் உள்ளுர் சந்தைக்கான டீசலை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒக்டோபர் நடுப்பகுதி வரை முடக்கல் நிலை நீடிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்புர்  குறைவடைந்துவருவதே அதிக கரிசனைக்குரிய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் நிலவரம் எதிர்மாறானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழு நாளை இலங்கைக்கு வருகை: Europe union srilanka

Image
 இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழு நாளை இலங்கைக்கு வருகை: Europe union srilanka   ஆர்.ராம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது  குழுவொன்று நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹி;ந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இலங்கை அரசாங்கமானது 2017ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பபடும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதன் பின்னர் கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணப்படும் நிலைமைகள் தொடர்கவும் குறிப்பிடப்பட்டு தீர்...

மஜ்மா நகர் மையவாடி காணியில் தொடர்ந்தும் ஜனாசாக்களை அடக்குவதற்கு சிக்கலா நிலைமையா !.

Image
 மஜ்மா நகர் மையவாடி காணியில் தொடர்ந்தும் ஜனாசாக்களை அடக்குவதற்கு சிக்கலா நிலைமையா ! மஜ்மாநகர் மையவாடி காணி சம்மந்தமாக நேற்று 2021.09.24ம் திகதி 69 அமைப்புக்கள் ஒன்றினைந்து தமது அறிக்கையினை பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பொறுப்புவாய்ந்த அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   அந்த வகையில் இவ் 69 அமைப்புக்களில் பெரும்பாலான அமைப்புக்கள் எனப்படுபவை ஒரே பிரதேசத்தைச் சார்ந்ததாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்த 69 அமைப்புக்கள் என்பது கல்குடா முஸ்லிம் பிரதேசத்தின் ஒட்டு மொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதா? அல்லது குறிப்பிட்ட ஒருசிலரின் இலாபம் கருதியதா? என்பது சம்மந்தமான கேள்வி எழுந்துள்ளது. காரணம் மிகவும் வேதனைக்கும், சோதனைக்கும் மத்தியில் எரிக்கப்பட்ட ஜனசாக்களை நிறுத்தி அவற்றை அடக்கம் செய்ய ஜனாதிபதி அனுமதி தந்துள்ள போது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் கல்குடா முஸ்லிம் பிரதேசத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டது, ஆனால் இன்று அதைத் தடுக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமானது  எதற்காகச் செய்யப்படுகிறது என்பது சம்மந்தமான தெளிவு மக்களு...

இன்று முதல் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள முடியும்.

Image
 இன்று முதல் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள முடியும்.   கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயல்படும். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்படும். ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும். அதேநேரத்தில் ஆய்வகம் சோதனைகளை ஒவ்வொரு மணிநேரமும் 500 சோதனைகள் அடங்கலாக அன்றாடம் 7 ஆயிரம் சோதனைகளை மேற்கொள்ளும். பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் மூன்று மணி நேரத்திற்குள் வெளியிடப்படும். அதன்படி சுற்றுலாப் பயணிகள் எதிர்மறையான சோதனை முடிவுகளை அளித்து, கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டு இருந்தால் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக நாட்டிற்குள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு விசேட சலுகையின் கீழ், இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் சோதனைகள் முன்னெடுக்கப்படும்.

யோஹானியின் சாதனையை அரசாங்கம், பாராட்டி கெளரவிக்கவுள்ளது.

Image
 யோஹானியின் சாதனையை அரசாங்கம், பாராட்டி கெளரவிக்கவுள்ளது.   'மெனிக்கே மகே ஹிதே' பாடலின் மூலம்உலகம் முழுதும் பிரபல்யமான இலங்கை பாடகி யோஹானியின் சாதனையை அரசாங்கம் பாராட்டி கெளரவிக்கவுள்ளது. இந்த பாடல் உலகளாவிய ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளளதுடன், தற்சமயம் யூடியூபில் 123 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சாதனையை உள்ளூர் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் மட்டும் அல்லாது உலகளாவிய ரீதியிலுள்ள பிரபல்யமான கலைஞர்களும், ரசிகர்கள் ஏனைய முக்கியஸ்தர்களும் பாராட்டி வருகின்றனர். இந் நிலையில் இந்த வெற்றிக்காக யோகானியையும் சதீஷனையும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கத் தவறியமை குறித்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், கொவிட்-19 சூழ்நிலையின் விளைாவினால் எந்த பொது நிகழ்வினையும் நடத்த முடியாது சூழ்நிலை உள்ளது. எவ்வாறாயினும் யோஹானியின் சாதனையை அரசாங்கம் அங்கீகரிக்கும் அதே வேளையில், கொவிட்-19 தடுப்பு நிலைமை மேலும் முன்னேற்றம் கண்டவுடன் முறையான பாராட்டு நிகழ்வு நடைபெறும் என...

தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு ; விஷேட கலந்துரையாடல்

Image
 தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு ; விஷேட கலந்துரையாடல்   கெலனிய, மானல்வத்தையில் அமைந்துள்ள பௌத்த  ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தின் இஸ்தாபகரும் ஜனாதிபதியின் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான சர்வதேச ஆலோசகர் வன. கௌரவ கலாநிதி போதாகம சன்திம நாயக தேரர் அவர்களுக்கும் புத்தசாசன,மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ பிரதமரின் மத விவகார இனைப்பாளர்கலான வன.கௌரவ கலாநிதி அங்ரஹரே கஸ்ஸப நாயக தேரர் (பௌத்த விவகாரம்), சிவ ஸ்ரீ கௌரவ கலாநிதி பாபு சர்மா குருக்கள் (ஹிந்து விவகாரம்), அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கௌரவ கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி (முஸ்லிம் விவகாரம்) மற்றும் அருட்தந்தை கௌரவ கலாநிதி சிக்டஸ் குருகுலசூரிய (கிறிஸ்துவ மற்றும் கத்தோலிக்க விவகாரம்) ஆகியோர்களுக்கும் இடையில் (24/09/2021) விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது தேசிய இன மத நல்லிணக்கத்துக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி விஷேட கலந்துரையாடல் , பௌத்த மதத்தலைவர்களுடன் ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களுக்கு இடையில் சகவாழ்வு என்ற தொனிப்பொருளில் ஒன்று பட்டு சிங்கள மொழி தெரியாதவர்களுக்கு ச...